எல்லாம் புள்ள குட்டிகளோட இருக்காங்க நான் மட்டும் சோட்டா பீம் பார்க்கிறேன்.! புலம்பி தள்ளும் பிக்பாஸ் பிரபலம்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் பாலாஜி முருகதாஸ்.  இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு இவருக்கு பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் தான் திரைப் படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வந்த பாலாஜிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்நிகழ்சியை ஓரளவிற்கு சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி நிகழ்ச்சியில் ரன்னராகவும்  வெற்றி பெற்றார்.

இவர் மாடலிங்கில் பணியாற்றி வந்தார் அந்த வகையில் இவருக்கு சில விருதுகளும் கிடைத்துள்ளது இதன் மூலம் கரோலின் காமாட்சி, சிறுத்தை உள்ளிட்ட இன்னும் சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ஆல்பம் சாங் போன்றவற்றில் நடனம் ஆட ஆரம்பித்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.  தற்பொழுது லாக்டவுன் காரணமாக ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கி உள்ளது.

balaji
balaji

எனவே தற்போது படப்பிடிப்புக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் முருகதாஸ் மிகவும் புலம்பிவுள்ள அந்த கேப்ஷன் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அதில் பாலாஜி முருகதாஸ் எனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது.  ஆனால் நான் தனியாக டிவி பார்ப்பது இன்ஸ்டாகிராம் பார்ப்பது போன்றவற்றை செய்து வருகிறேன். அந்தவகையில் நான் இப்பொழுது சோட்டா பீம் பார்ப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment