பிக்பாஸ் பார்த்ததே கிடையாது அண்டப்புளுகு புளுகிய அபிஷேக்.! அப்போ இது என்ன என வீடியோவை வெளியிட்டு கண்டம் பண்ணும் ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதேபோல் இந்த சீசனில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் பாரபட்சமான முகம் என்றால் இமான் அண்ணாச்சி, சின்னப்பொண்ணு, பவானி ரெட்டி, கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் ராஜ் ஜெயமோகன் இவர்கள்தான்.

அதேபோல் புதுமுகங்களின் ஒருவர்தான் அபிஷேக். சமூகவலைதளத்தில் தன்னை ஒரு அதிமேதாவி போல் உணர்ந்து கொண்டு இவர் பிரபலங்களிடம் அடிக்கடி விமர்சனங்களை வாங்கி வருவார். அது மட்டும் இல்லாமல் தன்னை ஒரு சினிமா பையன் என தனக்கே செல்லப்பெயர் வைத்துக் கொண்டுள்ளார். இவரை பற்றி தெரியாதவர்கள்  குறைவு தான் அந்த அளவுக்கு மொக்கை வாங்கி பிரபலமாகி விட்டார்.

அதே போல் அடிக்கடி பிரபலங்களைப் பேட்டி எடுப்பார் அப்பொழுது இவர் செய்யும் ரியாக்ஷன் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். சமீபத்தில் கூட விஜய் ஆண்டனியை பேட்டி ஒன்று எடுத்தார் அப்பொழுது வெயிலோடு விளையாடு பாடலை பாடினார் அதை வச்சி செய்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்ட இரண்டாவது நாளிலேயே தனது அம்மா மற்றும் திருமண வாழ்க்கை குறித்து கடந்து வந்த பாதை டாஸ்க்கில் கூறினார்.

இவர் திருமண வாழ்க்கையை கூறி அழுதது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது அதுமட்டுமில்லாமல் அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் முன்னும் பின்னும் முரணாக இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நேற்றைய எபிசோடில் யார் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை  இதற்கு முன் பார்த்ததே கிடையாது என கேட்டிருந்தார்.

abishek-raja
abishek-raja

அதற்கு அபிஷேக் கையை தூக்கி நான் பார்த்ததே இல்லை சார் என்று கூறியிருந்தார் இந்த நிலையில் அபிஷேக் இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தாக்கி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் அது தற்போது இணைய தளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது அதில் அவர் கூறியதாவது ஊருக்கே தெரியும் உங்கள் கேமரா வைத்து எடுத்துக்கிட்டு இருக்காங்க கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சிஎம் ஆகணும்னு நீ பண்ற வேலை இருக்கே முடியலடா என்று பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் பார்க்காமலேயே இப்படி பேசி உள்ளீர்களா. வாய் கூசாம பொய் வேற என வச்சு செய்து வருகிறார்கள்.

Leave a Comment