கிட்டத்தட்ட மாமியார் வீடு தான் பிக் பாஸ்.! லைவ் வீடியோவில் கெட்டவார்த்தையில் பேசிய அபிஷேக் ராஜா.

விஜய் தொலைக்காட்சியில் தங்களுடைய  டி ஆர் பி யை பெற்றுக் கொள்வதற்காக ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் இந்த வருடம் ஐந்தாவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முதலாக திருநங்கை மாரிமுத்து கலந்து கொண்டார் ஆனால் அவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். மேலும் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ்வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்கள் இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற வர்களில் அபிஷேக் ராஜா என்பவரும் ஒருவர்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி வந்தார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை விளையாட விடாமல் செய்ததால் மக்கள் பலரும் அவரை எலிமினேட் செய்து வெளியே துரத்தினார்கள்.இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் இரண்டாவது முறையாக.

ஆனால் இந்த முறையும் மக்கள் விடவில்லை அவரை மறுபடியும் வீட்டை விட்டு வெளியே செல்ல வைத்தார்கள். வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக் ராஜா முதன்முறையாக இன்ஸ்டகிரம் சமூகவலைதளத்தில் லைவில்  வந்துள்ளார் அப்பொழுது பல ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.

பிக்பாஸ் வீட்டில் தான் அபிஷேக் ராஜா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இவர் பேசியது அதிர்ச்சியை கொடுத்துள்ளது ஏனென்றால் தன்னுடைய நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு காரில் செல்கிறார் பிக்பாஸ் அபிஷேக் ராஜா.

அப்பொழுது தன்னுடைய நண்பரை ஒரு கால கட்டத்தில் தகாத வார்த்தையால் திட்டுகிறார் பிக்பாஸ் வீட்டில் இருந்ததை விட வெளியே இன்னும் மோசமாக அபிஷேக் ராஜா பேசுவார் என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=_7dqPbzdfEM

Leave a Comment