பிக் பாஸ் சீசன் 5 ல் பிரபலமான பாவனி ரெட்டியின் முன்னாள் காதலர் இவர்தானா.! வைரலாகும் புகைப்படம்.!

கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது. அதேபோல் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் திருநங்கையாக நமிதா மாரிமுத்து அவர்களும் கலந்து கொண்டார் ஆனால் சில பிரச்சினை காரணமாக  அவர் பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் நடியா சாங் வெளியே சென்றார் அதனை தொடர்ந்து அடுத்த வாரத்தில் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றார் இந்நிலையில் மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பரபரப்பாக பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் கடந்துவந்த பாதை என்ற டாஸ்க்கில் பலரும் தங்களுக்கு நடந்த சோகக் கதைகளைக் கூறி அனைவரையும் கண்ணீரில் மிதக்க விட்டார்கள் அந்த வகையில் பாவனி ரெட்டி தன்னுடைய சோக கதையை கூறி பலரையும் கண்ணீரில்  மூழ்கடித்தார். பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு சீரியலில் நடித்து வந்தார்.

இந்த  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை அடைந்துள்ளார் அப்படியிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது மறைந்த கணவர் குறித்தும் அதன்பிறகு வேறு ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அவர் தகாத வார்த்தையால் பேசியதால் அவரை விட்டு விலகியதும் கூறியிருந்தார்.

pavani reddy
pavani reddy

இந்த நிலையில் தனது கணவர் இறந்த பிறகு வேறு ஒரு நபரை காதலித்துள்ளார்  அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது அவரின் பெயர் ஆனந்த் ஜாய் இவர் வேறு யாரும் கிடையாது ஜெயம்ரவி மனைவி ஆர்த்தியின் அண்ணன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

pavani reddy
pavani reddy
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment