பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகைகளை தட்டிப் பார்த்து தூக்கிய பிக்பாஸ்..! இனி டிஆர்பியில் நாங்க தான் கிங்க்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்னவென்றால் அது செம்பருத்தி சீரியல் தான் அந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியா ராமன் என்ற நடிகை இந்த சீரியல் மூலமாக மிக பெரும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.

இவ்வாறு இந்த சீரியலில் தன்னுடைய எதார்த்தமான கம்பீரமான நடிப்பின் மூலமாக எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் நமது நடிகை ஏற்கனவே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பல திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவர் அணியும் உடைகளைப் பார்த்து  அவரைப் பின்தொடரும் ரசிகர்கள் ஏராளமாக உண்டு. இவ்வாறு கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த சீரியல் தொடங்கப்பட்டு தற்போது வரை மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரஞ்சித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவர்களுடைய முதல் மனைவி பெயர் அருணா ஆனால் இவர் தற்போது காலமாகிவிட்டார்.

இது ஒருபக்கம் இருக்க தற்போது செம்பருத்தி சீரியலில் சமீபகாலமாக அகிலாண்டேஸ்வரியை கண்ணில் காட்டுவதே கிடையாது. ஏனெனில் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறாராம் அதுமட்டுமில்லாமல் இவர் பிக் பாஸ்  5வது சீசனிலும் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் தற்போது என்ன ஆனார் என்பது தெரியவில்லை  தற்போது இந்த நடிகையும் விலகி விட்டால் இந்த சீரியல் என்ன ஆகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கக வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் ஐந்தாவது சீஸனில் தற்போது  சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத், பவானி ரெட்டி, சூசன் மற்றும் பிரியா ராமன் போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதன் காரணமாக பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

bigboss 5
bigboss 5

Leave a Comment