அடிதடிக்கு பஞ்சமில்லாத போட்டியாளர்களை இழுத்துப் போட்ட “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி.! உறுதி செய்யப்பட்ட 6 பேர்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடந்து வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஐந்து சீசன்கள் வரையுமே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றன.

அந்த வகையில் சென்ற வாரம் நிறைவுபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ராஜு  முதலிடத்தைப் பெற்று ரூபாய் 50 லட்சம் பரிசுத் தொகையை பெற்றுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து பிரியங்கா, பாவணி ஆகியவர்கள் அடுத்த அடுத்த இடத்தைப் பெற்றுள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்ட்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியையும் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் மொத்தம் நடந்தவை எடிட் செய்து ஒரு மணி நேரம் மட்டுமே.. ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளது. இதனிடையே இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்றால் இதற்கு முன் நடந்த ஐந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் இதிலும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

மேலும் அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களில் ஆறு போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் பிரபலங்களான ஓவியா, ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாசலம், சினேகன் போன்றவர்களின் பெயர்கள் கன்ஃபார்ம் லிஸ்டில் உள்ளன.

Leave a Comment