கட்டுப்பாட்டை மீறிய பிக்பாஸ் ஷூட்டிங்.! இழுத்து மூடிய அவலம்

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ட்ரெண்டிகான நிகழ்ச்சியாக வலம் வந்துகொண்டிருப்பது பிக்பாஸ் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலரின் மீது சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தாலும் தொடர்ந்து மக்கள் தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி உலகில் முதல் இடத்தை பிடித்ததால் இந்தியாவிலும் ஒளிபரப்பாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் கடந்த நான்கு வருடங்களாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியாளர்களுக்கு இந்நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக கமலஹாசன் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரைத் தொடர்ந்து மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 3யை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார்.

அந்த வகையில் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சி தற்போது தான் பாதி வரையிலும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.  இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் செட்டில் பணியாற்றி வந்த ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

bigg boss 3

எனவே தமிழக மருத்துவத்துறை உத்தரவின் பேரில் உடனடியாக தமிழக காவல்துறை பிக்பாஸ் செட்டை பூட்டி அதிரடியாக சீல் வைத்து உள்ளார்கள். இந்நிகழ்ச்சி பிப்ரவரி 14 ஆம் தேதி தான் தொடங்கப்பட்டது அந்த வகையில் கிட்டத்தட்ட 94 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு உள்ளது.

எனவே பிக்பாஸ் 2 குழுவினர்களை கொரோனா பாதித்ததால் போட்டியாளர்களுக்கும் கொரோனா தோற்று பரவி விடும் என்பதால் இந்நிகழ்ச்சியில் இருந்த 8 போட்டியாளர்களும் தனியார் மருத்துவமனையில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

Exit mobile version