அர்ச்சனாவை அப்படியே ஃபாலோ பண்ணும் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்.! இந்த தடவியும் அன்பு கேங் உருவாகிறதா.?

விஜய் டிவியில் பிக் பாஸ் 5 வது சீசன் அண்மையில் தொடங்கியது இதுவரை முதல் வாரம் மட்டுமே முடிந்துள்ளது 18 பேர்களில் ஒருவரான நமிதா மட்டும் சில விஷயங்களால் வெளியேறி உள்ளார். மீதி 17 பேர்களும் தற்பொழுது இருக்கின்றனர் இவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகளை பிக்பாஸ் வைத்து வருகிறத. இதில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

சனி,ஞாயிறுகளில் உலகநாயகன் கமல் வந்து அந்த வாரத்தில் நடந்த சரி, தவறு எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பது அவரது ஸ்பெஷல்.  இந்த வாரமும் வந்து தனது ஆரம்பத்தில் சிறப்பாக பேசி ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் இனி சண்டை சச்சரவு உரசல் எல்லாம் இருக்கும் நிச்சயம் நீங்கள் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என கூறினார் அதற்கு பிரியங்கா நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருப்போம் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது என கூறினார்.

அதற்கு அவர் பார்ப்போம் என நகைத்தார் கமல். கமல் ஒரு விஷயத்தை சொல்லி முடிப்பதற்குள் பிரியங்கா ஒவ்வொருவராக எழுந்து வந்து தனது மற்ற போட்டியாளர்களுடன் நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம் என கூறியுள்ளது பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.  பிரியங்காவும் அர்ச்சனாவை போல ஒரு கேங்கை இது மறைமுகமாக உருவாக்குகிறார்கள் என்பது போலவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 4 இல் அர்ச்சனா ரியோ, நிஷா, சோமு, கேபி போன்ற ஓரு சிலரை கையில் கோர்த்துக்கொண்டு இப்படித்தான் சுற்றி திரிந்து வந்தார் ஆனால் கடைசியில் ஆரி தனது திறமையை காட்டி டைட்டில் வின்னர் என்ற பட்டத்தைப் பெற்றார். அதுபோலவேதான் இப்பொழுது நடக்கப்போகிறது என கூறுகின்றனர்.

தற்போதைய பிக்பாஸ் சீசன் 5 பிரியங்கா தாமரைச்செல்வி,நிரூப், அபிஷேக் ஆகியோர்களை தன்னுடன் நிறுத்தி பக்கபலமாக இருக்கிறார் இவரும் வெகுவிரைவிலேயே அன்பு என்ற ஒரு கேங்கை அமைத்து இந்த சீசனில் வலம் வருவார் என கூறப்படுகிறது. அப்படி அவர் செய்தால் ரசிகர் மனதில் இடம் பிடிக்காமல் மாறுதலாக ரசிகர்கள் அவரை கழுவி உத்துவார்கள் என்பது குறிப்பிடதக்கது. மேலும் பிரியங்கா ரொம்ப ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆக இருக்கிறார் அதுவே அவருக்கு வினையாக மாறும் என பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Comment