வெள்ளித்திரையில் நடிக்கும் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..? அவரே வெளியிட்ட புகைப்படம்

சின்னத்திரையில் ஃபேமஸான சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவம் சந்திப்போம் சீரியலில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, திரு திருமதி கில்லாடி சீசன் 1, சரவணன் மீனாட்சி சீசன் 3, இது சொல்ல மறந்த கதை..

புது புது அர்த்தங்கள் என பல்வேறு சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் கடந்து கொண்டு பயணித்த ரச்சிதாவுக்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு அதிகப்படியான ரசிகர்களை பெற்று தந்தது. பிக் பாஸ் வீட்டில் 90 நாட்களுக்கு மேல் பயணித்து அசத்தினார்.

வெளியே வந்த அவர் ஒரு புதிய காரை வாங்கினார் அதன் புகைப்படம் பெரிய அளவில் வைர நிலையில் தற்போது ரச்சிதா மகாலட்சுமிக்கு மற்றொரு ஜாக்பாட் அடித்துள்ளது அதாவது சின்னத்திரையையே கதியென கடந்த ரச்சிதா முதல் முறையாக வெள்ளித்திரையில் நடிக்க சென்று இருக்கிறார்.

அந்த தகவலை சீரியல் நடிகை ரச்சிதாவே வெளிப்படையாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆம் ரச்சிதா மகாலக்ஷ்மி நடிக்க உள்ள திரைப்படம் “மெய்நிகரே”  என்னும் படத்தில் தான் நடிக்க உள்ளார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட  ரச்சிதா மகாலட்சுமி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து நீங்கள் எதிர்பார்த்தது.

தற்பொழுது நடக்க உள்ளது. இதுபோல மென்மேலும் நீங்கள் பட வாய்ப்பை அள்ளி நடிக்க வேண்டும் எனக் கூறி வாழ்த்தி வருகின்றனர் மேலும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் தட்டி வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதோ நீங்களே பாருங்கள் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

rachitha

Leave a Comment

Exit mobile version