பிரியங்கா இல்லைன்னா இந்த சீசனே மொக்க தான்..! நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு மொக்கை போட்டியாளர்களை தேர்ந்தெடுத்த பிக் பாஸ்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது பல்வேறு போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டுள்ளார்கள் இதுவரை 18 போட்டியாளர்கள் இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசனில் வெறும் 7 ஆண் போட்டியாளர்கள் மட்டும் கலந்து உள்ளார்கள்.

மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு பெண்கள் போட்டியாளர்கள் இந்த சீசனில் அதிகமாக உள்ளார்கள்.  இதன் காரணமாக பெண்களின் ஆதிக்கமே இந்த சீசனில் அதிகம் இருக்கும் என ரசிகர்கள்  எதிர்பார்த்து வருகிறார்கள்.

முன்பெல்லாம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் ஆனால் தற்போதெல்லாம் ஜெர்மனி மலேசியா பெங்களூர் என  பல்வேறு இடங்களில் உள்ள மாடல் அழகிகளாக பார்த்து  இந்த வீட்டிற்குள் போட்டுள்ளார்கள்.

இவ்வாறு விஜய் டிவி செய்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மாடல் அழகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக இளசுகளும் இளைஞர்களும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பார்கள் என்ற எண்ணம் தான் அவர்களை அப்படி செய்ய வைத்தது.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் குரல் கொடுக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது பிரியங்கா தான் போன சீசனில் அர்ச்சனா எப்படி கெத்து காட்டியுள்ளார் அதேபோல இந்த சீசனில் பிரியங்கா தன்னை பிரபலப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் பார்க்கப் போனால் இந்த சீசனில் தொகுப்பாளராக கமல் இருக்கிறாரா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் பலர் சந்தேகத்தில் உள்ளார்கள். அதேபோல இந்த சீசனில் காமெடி செய்யும்  போட்டியாளராக திகழ்ந்து வருபவர் தான் ராஜீ மேலும் மற்ற போட்டியாளர்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமே கிடையாது.

bigboss-1
bigboss-1

அந்த வகையில் பார்க்கப் போனால் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகிறார்கள்.

Leave a Comment