இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கெட்ட வார்த்தைகள் பேசிய பிக்பாஸ் போட்டியாளர் – யாருன்னு தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக  நடைபெற்று வருகிறது இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மக்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதற்குரிய நல்ல செய்தியை கொடுத்தது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்  OTT தளம் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் விளையாண்ட பல போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முதலில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த..

நிலையில் அவருக்கு அரசியல் சினிமா வியாபாரம் என பல வேலைகள் இருப்பதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.அவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். வாரவாரம் நாமினேஷன் வைக்கப்பட்டு மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளைப் பெற்று இருக்கும் நபரை சிம்பு வெளிய அனுப்பி வைக்கிறார்.

நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்களும் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற ஒவ்வொருவரும் கடுமையாக மோதிக் கொள்வதுமாக இருந்து வருகின்றனர். சண்டை போடுவது ஒரு பக்கம் இருந்தாலும் தேவையில்லாத பேச்சுகளை பேசியும் மற்றவர்களை தாக்குகின்றனர். அப்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்  அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் நபராக அனிதா சம்பத் இருந்து வருகிறார்.

திருமணமான பெண் போல் நடந்து கொள்ளாமல் அதிகம் கெட்ட வார்த்தை பேசுவது தேவையில்லாததை பேசி ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் காரணமாக இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கிய அனிதா சம்பத்  வெளியேறியுள்ளனர்

Leave a Comment