தனக்கு விரும்பிய புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் ஆரி.! இதுவரை லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர்.

திரையுலகில் வெற்றி கண்ட நடிகர்  உலக நாயகன் கமலஹாசன். வெள்ளித்திரையில் தற்பொழுது நடிக்காவிட்டாலும் சின்னத்திரை பக்கம் தற்போது தொகுப்பாளராக அறிமுகமாகி நிகழ்ச்சிகளை சிறப்பாக பங்காற்றி வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் செய்ததாக நடித்து வருகிறார் அந்த வகையில் நான்காவது சீசன் சமீபத்தில் முடிந்தது.

இதில் டைட்டில் வின்னர் படத்தை நடிகர் ஆரி கைப்பற்றினார் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ஓட்டுகள் வாங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

வெளியே வந்த ஆரியும் இது எனக்கான வெற்றி அல்ல உங்களுக்கான வெற்றி என வாழ்த்தினார் மேலும் மெரினா கடற்கரை ஓரம் உள்ள ஒரு மாலில் ரசிகர்களுக்கு மலர் தூவி வாழ்த்தும் தெரிவித்தார்.

ஆரியை பெரிதும் பிடிக்க காரணம் சினிமாவையும் தாண்டி அவர் பொதுமக்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தன்னால் முடிந்த பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவது தான்.

அந்த வகையில் தனக்குப் பிடித்த புகைப்படத்தை ஒன்றை பதிவு செய்துள்ளார் திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்களுடன் அவர் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நான் விரும்பி எடுத்துக்கொண்ட புகைப்படம்.

எதுவென்றால் அது இதுதான். மேலும் குப்பை போடுபவர்களை விட அதை சுத்தம் செய்பவர்களே உயர்வானவர்கள். இதை கொரோனா காலத்தில் உலகிற்கு உணர்த்திய உங்களது சேவை மகத்தானது.

என குறிப்பிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Leave a Comment