பிக்பாஸ் 5 : இறுதி நிகழ்ச்சியில் ராஜுவை பார்க்க வராமல் போன இமான் அண்ணாச்சி – காரணம் என்ன தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சி கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தி வெற்றி கண்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்க்காத அளவிற்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த தளத்திற்கு  செல்கிறது. இப்பொழுது கூட பிக் பாஸ் OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ்  5 சீசன் அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 16 ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது. 106 நாட்கள்  இந்த ஷோ நடத்தது. இதில் டைட்டில் வின்னர் படத்தை ராஜூ தட்டிப் பறித்தார் இரண்டாவது இடத்தை விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா பிடித்தார்.

ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கப்படும் நாள் மற்றும் கடைசி நாளை எப்படியும் பார்த்து விட வேண்டும் என அல்லாடுவது வழக்கமாக அளவிற்கு சிறப்பாக இருக்கும். மேலும் காமெடி, டான்ஸ் மற்றும் போட்டியாளர்களின் மன நிலைமை யார் வெற்றி பெறப் போகிறார்கள் என அனைத்தும் அதில் காட்டப்படும்.

இதிலும் பழைய மற்றும்  கலந்துகொண்ட போட்டியாளர்களும் இறுதிநாளில் காட்டுவார்கள் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 – ல் ராஜீவ் மிகவும் பிடித்த போட்டியாளராக வீட்டில் இருந்தவர் அண்ணாச்சி. அவர் வருவார் என ராஜு மற்றும் அவரது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர் ஆனால் அவரால் வரமுடியாத சூழல் நிலவியது இதனையடுத்து அவர் வரவில்லை .

என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. இமான் அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தொடர்ந்து படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் போன்ற வேலைகள் இருந்ததால் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது மேலும் ஏழு நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஆனால் படப்பிடிப்பு, டப்பிங் என பிஸியாக இருந்ததால் நேரம் ஒதுக்க முடியாமல் போனது. அதனாலேயே இறுதி  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என பதிலளித்துள்ளார்.

Leave a Comment