பவானி உன்னை இங்க வச்சி தான் கடைசியாக நான் போட்டோ எடுத்தேன் – புகைப்படத்தை பகிர்ந்து வருத்தப்பட்ட யாஷிகா.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2 வின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்று இருந்தாலும் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை  அவளால் பெற முடியவில்லை அதற்காக அவர் வருத்தப்படவும் இல்லை  ஏனென்றால் வெளிவந்த உடனே அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் ஜாம்பி,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற கவர்ச்சி படங்கள் பெரிய அளவில் கைகொடுத்தது அதன்மூலம் இளசுகளை தன்வசப்படுத்திக் கொண்டார். மேலும் இன்ஷா பக்கத்தில் யாஷிகா விதவிதமான குட்டையான உடைகளை அணிந்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் மயக்கி போட்டார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு மென்மேலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களே கிடைத்ததால்  ஒரு கட்டத்தில் கடுப்பாகி உங்களுக்கு திறமை இருக்கிறது நீங்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சூப்பராக இருக்கும் என கூறவும் நானும் நடிப்பேன் என தெரிவித்தார் அந்த வகையில் தற்போது கடமையை செய், சலார் போன்ற படங்களில் வித்யாசமாக இதுவரை இல்லாத மறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ரெடி ஆனார் இப்படி திரை உலகில் தனது திறமையை காட்டினார்.

வெள்ளித்திரையை தாண்டி அவ்வப்போது தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் அண்மையில் பாண்டிச்சேரி சென்று சென்னை திரும்பிய பொழுது அவரது கார் மிகப்பெரிய ஒரு விபத்தை சந்தித்தது அந்த விபத்தில் அவரது தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் யாஷிகா மற்றும் இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் இருந்து யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் இந்த நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில்  தோழி பவானியை கடைசியாக எடுத்த புகைப்படத்தை சேர் செய்து,உன்னை நான் கடைசியாக ஆகவே ஒரு ஓரத்தில் உட்கார வைத்து புகைப்படம்எடுத்தேன் என கூறி பதிவிட்டுள்ளார்.

bhavani

Leave a Comment

Exit mobile version