என்னுடைய கணவர் திரும்பி வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என கூறிய பாவனி.! வருத்தத்தில் அமீர் ரசிகர்கள்..

சின்னத்திரை நடிகை பாவனி தன்னுடைய முதல் கணவர் பற்றி பேட்டியளித்த நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை பாவனி ரெட்டி. ஆரம்ப, காலகட்டத்தில் இரட்டைவால் குருவி தவணை முறை வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

பிறகு சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னதம்பி சீரியலின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாவனி  கடந்த 2016ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மன அழுத்தத்தின் காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார் இதன் காரணமாக பாவனி சிறிது காலம் திரை உலகில் இருந்து விலகி இருந்தார் அதன் பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே பாவனி பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்

ஆனால் இவரை ரசிகர்கள் இறுதிவரை இந்நிகழ்ச்சியில் இருக்க வைத்தார்கள் அதே நிகழ்ச்சியில் வைல்ட் காடு என்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார். பாவனி இதெல்லாம் வேண்டாம் என கூறி வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இருவரும் காதலித்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமிப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் உங்கள் வாழ்க்கையில் திரும்பி நடக்க வேண்டும் என்று நினைக்கும் தருணங்கள் என்னவென்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பாவனிகூறியதாவது நான் என் கணவர் திரும்பி வரவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் நான் அமீரை காதலிப்பது உண்மைதான் இதனால் நான் இரண்டே நிலைப்பாட்டில் இருப்பதாக யாரும் எண்ணி விடாதீர்கள் என் கணவர் திரும்பி வந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனக்கு தெரியாமலேயே அவர் என்னை விட்டுப் போய்விட்டார் அந்த வாழ்க்கையை திரும்பி கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என கண்கலங்கி கூறியுள்ளார்.

Leave a Comment