பாவனி மீது இருந்த காதல் மயக்கத்தால் தான் அவருக்கு முத்தம் கொடுத்தேன்.! அமீர் அதிரடி பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதேபோல் இந்த சீசனில் முதன்முறையாக திருநங்கை அவர்களும் கலந்து  கொண்டார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் கஷ்டப்பட்டது கூறி அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தது அதுமட்டுமில்லாமல். அதேபோல் இந்த போட்டியில் நமிதா மாரிமுத்து திருநங்கையா கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் இடையில் வந்தவர்தான் அமீர்.

இவர் தன்னுடைய பயணம் குறித்து தனியாக பேசியிருந்தார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அமீர் காதல் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் அமீர் அவர்கள் பாவனிக்கு முத்தம் கொடுத்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நிலையில் முதல் முறையாக அமீர் முத்தம் குறித்த விவகாரம் பற்றி பேசியுள்ளார்.

அதில் அமீர் அவர்கள் கூறியதாவது பாவணி அவர்களுக்கு நான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க வில்லை அப்படி கொடுத்திருந்தால் தான் பிரச்சனையாக மாறி இருக்கும். அவர் என்னை தடுக்கவே கிடையாது அவருக்கு தெரிந்து தான் கொடுத்தேன் அப்பொழுது இருந்த காதல் உணர்வில் கொடுத்துவிட்டேன் அதை எதற்கு பெரிதாக பேசுகிறீர்கள்.

இப்படியே பெரிதாக பேசி சர்ச்சையை கிளப்புகிறார்கள் நாங்கள் இருவரும் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம் எனக்கூறி இவர்களின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

Leave a Comment