திருமண நாளில் திருமண புகைப்படத்தை வெளியிட்ட பாவனா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பிறகு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஜெயம் ரவியுடன் தீபாவளி என்ற திரைப்படத்தில் நடித்த போது தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமானவர். பின்னர் அதனை தொடர்ந்து  ஜெயம்கொண்டான், அசல் போன்ற படங்களில் தமிழில் நடித்திருந்தார். இவர் கடைசியாக  அசல் திரைப்படத்தில் நடித்ததுடன் தமிழில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

ஆனால் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும் இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி  திரைப்படங்களில் இன்றும் நடித்து வருகிறார். இவர் 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணத்திற்கு பிறகு பிஸியாக பல மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று தனது ஆறாவது திருமண நாள் எனக் கூறி தங்களது திருமணம் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

bhavana
bhavana
bhavana
bhavana
bhavana
bhavana