இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தான் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை.! இப்பொழுது ரசிகர்களின் கிரஷ் என்றே கூறலாம்

1986 ஆம் ஆண்டு திருச்சூர் கேரளாவில் பிறந்து வந்தவர்தான் நடிகை பாவனா இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் முதன்முதலாக சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதனைத்தொடர்ந்து வெயில் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

மேலும் இவர் தமிழில் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அழகில் ரசிகர்களை மயக்கிய இவர் தொடர்ந்து தமிழில் நடிக்க முடியாமல் போனது. என்னதான் தமிழில் இவர் நடித்து வந்தாலும் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கவில்லை அதன் பிறகு மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இதுவரை பாவனா 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார் தன்னுடைய பதினாறு வயதிலேயே மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானவர் பாவனா, அதேபோல் தன்னுடைய முதல் கன்னட திரைப்படத்தில் புனித் ராஜ்குமார் ஜாக்கி உடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. நடிகை பாவனா ஒருசிலர் சர்ச்சைகளில் சிக்கி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு கன்னட பிலிம் தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

bhavana

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் தான் சிறுவயதாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளர் அந்த புகைப்படத்தில் செம க்யூட்டான பாப்பாவாக தோற்றமளிக்கிறார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

bhavana

Leave a Comment

Exit mobile version