சேர்ந்து வாழ ரெடியான பாரதி.. கண்ணம்மாவிற்கு வைக்கப்போகும் டுவிஸ்ட் – அடுத்து என்ன நடக்க போகுது தெரியுமா.?

சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர். மேலும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறது. இந்த சீரியலை சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீரிஸ், போன்ற ஹிட் சீரியல்களை கொடுத்து வந்த பிரவீன் பெண்ணெட் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக எடுத்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெருமளவு ரீச் ஆகி உள்ளனர்.

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் வாங்கியுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் வேறு சில வாய்ப்புகளின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்காக தற்போது அவர் சாயலில் உள்ள வினுஷா தேவி என்ற மாடலிங் பிரபலம் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் எட்டு வருடங்களாக பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கோர்ட்டின் உத்தரவு படி ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இதில் புதிதாக விஜய் டிவி பிரபலம் நிஷா கண்ணம்மாவின் பக்கத்து வீட்டில் குடி வந்து கண்ணம்மாவை பார்த்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மைகள் தற்போது தான் ஒவ்வொன்றாக தெரிய வருகிறது. அதனால் இனி பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோ ஒன்றில் பாரதி கண்ணம்மாவிடம் உன்னோடு சேர்ந்து வாழ நான் தயார் ஆனால் ஒரு கண்டிஷன் அதை மட்டும் நீ செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அது என்னவாகயிருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கண்ணம்மாவின் மகள் சௌந்தரிய லட்சுமி என்னுடைய மகள் இல்லை என்பதை மட்டும் நீ கூற வேண்டும் என பாரதி சொல்லப் போவதாக ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment