16 வயது நடிகையை கூட விட்டுவைக்காத பாரதிராஜா.! புலம்பும் பிரபல நடிகை…

16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் பாரதிராஜா.

இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். பொதுவாக இவர் இயக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்களாக இருந்தாலும் சரி நடிகைகளாக இருந்தாலும் சரி அவர்களிடம் எப்படி நடிப்பை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை நுணுக்கமாக தெரிந்து கொண்டவர் தான் பாரதிராஜா.

அப்படி இவர் இயக்கும் படங்களில் நடித்த நடிகை மற்றும் நடிகர்கள் இவரிடம் அடி வாங்காத ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக இவர் இடம் அடி வாங்கிய ஒரு நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் அந்த படத்தில் நடித்த சில மறக்க முடியாத தகவல்களை கூறி இருக்கிறார்.

அதாவது பாரதிராஜா சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புது முகங்களில் ஒருவர்தான் நடிகை ரேவதி. இவரை மண்வாசனை படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார் பாரதிராஜா.

மண்வாசனை திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தார் நடிகை ரேவதி. அந்தப் படத்தின் போது நடிகை ரேவதியை பாரதிராஜா பலார் என்று கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சித்ரா லட்சுமணன் அவர்களின் பேட்டியில் பகிர்ந்து உள்ள ரேவதி பாரதிராஜா அடிக்காமல் நடித்து முடித்த நடிகைகலே கிடையாது என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் சித்ரா லட்சுமணன் நீங்கள் எந்த கட்டத்தில் அடி வாங்கினீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த ரேவதி ஒரே ஒரு அடி மட்டும்தான் வாங்கினேன் ஆனால் அதோட முடிந்து விட்டது அதாவது மண்வாசனை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தான் நான் அடி வாங்கினேன் அந்த காட்சியில் கத்தி பேச வேண்டும் அதற்காக கன்னத்தில் பளார் என்று அடித்தார் பாரதிராஜா.

அப்போது எனக்கு வயது 16 தான் ஆனது அதனால் அது என்னால் மறக்க முடியாத ஒரு தருணமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் அதே சமயத்தில் அந்த படப்பிடிப்பில் என்னை பாண்டியனும் அடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அதாவது பாரதிராஜா பாண்டியனை அடித்த கோபத்தினால் தான் பாண்டியன் தன்னை அடித்ததாக கூறி இருக்கிறார். இப்படி பாரதிராஜா தன்னை அடித்ததால் தான் அந்த படம் எனக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது அது மட்டுமல்லாமல் பாரதிராஜா அடிக்காமல் சினிமாவில் உயர்ந்தவர்களே கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகை ரேவதி.

Leave a Comment

Exit mobile version