ஆர்யா, சூர்யா படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி – எந்தெந்த கதாபாத்திரம் தெரியுமா.? சொன்ன ஷாக்காவீர்கள்.

மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் மீடியா உலகில் தன்னை பிரபல படுத்திக்கொள்ள கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாவற்றிலும் நடிக்கின்றனர் அந்தவகையில் மாடலிங் துறையில் இருந்து தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை கைகளில் பயணிக்கின்றனர். அவர்களில் ஒருவராக மாடலிங் துறையில் இருந்து வந்து தற்போது சின்னத்திரையில் பிரபலமடைந்தவர்.

நடிகை ரோஷினி அவர் பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையைக் காட்டினார். இந்த சீரியலில் காதல், சென்டிமென்ட், ரொமான்ஸ் என எந்த கதாபாத்திரம் கொடுத்திருந்தாலும் அதில் தனது திறமையை வெளிக்காட்டியதன் மூலம் இல்லத்தரசிகளை  தாண்டி காதல் ஜோடி, ரசிகர்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

அதன் காரணமாகவே இவரது நடிப்பு திறமையை பார்த்து சின்னத்திரையில் தாண்டி வெள்ளித்திரை பக்கம் வாய்ப்புகள் குவிந்தன ஆனால் ஆரம்பத்தில் அந்த வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு பாரதிகண்ணம்மா சீரியலில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டார் ஒரு கட்டத்தில்  அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தற்போது சின்னத்திரையில் இருந்து வெளியேறி வெள்ளித்திரையில் பட வாய்ப்புக்காக சென்றிருக்கிறார்.

ரோஷினி சீரியல்களில் நடித்து வந்தாலும் ஃப்ரீயாக இருக்கின்ற நேரங்களில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டும் டைட்டான ட்ரெஸ்ஸில் தனது அழகிய புகைப்படங்களை வீசி வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் போதே பல பட வாய்ப்புகள் வந்தது என கூறினோம் அதில் ஒன்று சூர்யாவின் ஜெயிபீம் படத்தில் செங்கொணி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் இவர்கள் தான் கிடைத்ததாம்.

மேலும் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தான் முதலில் கிடைத்ததாம். ஆனால் அதை அப்போது தவறவிட்டு உள்ளார். இந்த இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருந்திருக்கும் ஆனால் இப்போது விட்டு விட்டார் என புலம்புகிறாராம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment