பாரதிகண்ணம்மா அஞ்சலி கேரக்டரில் நடிக்க இருக்கும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகை.! வைரலாகும் புதிய எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் டிஆர்பி-யில் முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் சுவாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்பொழுது எட்டு வருடங்களாக அப்பா யாரென்று தெரியாமல் வளர்ந்து வரும் லட்சுமியிடம் தன் பிறந்தநாள் அன்று உன் அப்பாவை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று கண்ணம்மா கூற லக்ஷ்மியும் மிகவும் ஆர்வமாக தன் அப்பாவை காண்பதற்காக எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறாள்.

எனவே கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா இருவரும் எப்படியாவது பாரதியை கண்ணம்மாவின் பிறந்தநாள் அன்று அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விடவேண்டும் என்று பலவற்றை செய்து வருகிறார்கள். எனவே நேற்றைய எபிசோடில் ஹைதராபாத்துக்கு ஹேவாவை அழைத்து செல்வதாக பாரதி முடிவெடுத்து இருந்தான் ஆனால் ஹேமா சமையல் அம்மாவின் பிறந்தநாள் முடிந்தவுடன் போகலாம் என்று கூறி உள்ளார்.

ரசிகர்களும் கண்ணம்மாவின் பிறந்த நாளன்று எட்டு வருடமாக மறைந்திருந்த ரகசியம் வெளிவரும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து வெண்பாவின் சித்தப்பா பாரதியை நேரில் சந்தித்து கண்ணம்மாவின் பிறந்தநாளன்று வெண்பா செய்த அனைத்து சதித் திட்டங்களையும் கூறவுள்ளார்.

arul jothi
arul jothi

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் அதிரடியாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அஞ்சலில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி சீரியலில் இருந்து சமீபத்தில் வெளியேறி உள்ளார். எனவே அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக புதிய நடிகை ஒருவர் அறிமுகமாகி உள்ளார் அந்த எபிசோடு சமீபத்தில் வெளியாகிவுள்ளது.

Leave a Comment