என்னுடைய தோல்விக்கு முக்கிய காரணம் ஜெயம் ரவி தான்.! 50வது படம் வெளியாகியும் தனக்கான வெற்றி கிடைக்கவில்லை புலம்பும் நடிகர் பரத்..

Actor Bharath Niwas: பாய்ஸ் படத்தின் மூலம் 5 ஹீரோக்களில் ஒருவராக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் பரத். இந்த படத்தினை தொடர்ந்து காதல், செல்லமே, நேபாளி, வெயில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பரத்தின் 50வது படமாக உருவான லவ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக பரத் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பல தகவல்களை பகிர்ந்தார்.

பரத்தின் 50வது படமான லவ் திரைப்படத்தில் வாணி போஜன், விவேக், பிரசன்னா, ராதா ரவி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியான லவ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரமோஷனில் பேசிய பரத் தனது கேரியர் குறித்து பேசி உள்ளார்.

அதாவது பாய்ஸ், காதல், வெயில், எம் மகன் போன்ற வெற்றி திரைப்படங்களை தந்தாலும் முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை. இது குறித்து தனது தோல்விக்கு நான் மட்டுமே காரணம் எனக் கூறியுள்ளார் பரத். அதாவது, முக்கியமாக நேபாளி படத்தில் நிறைய படுக்கையறை காட்சிகள் இருக்கும் அது மட்டுமில்லாமல் அந்த படம் ஏ சான்றிதருடன் வெளியானது.

அதன் காரணமாக ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் நேபாளி படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை என கூறினார். அந்த நேரத்தில் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் வெளியாகியது ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக சந்தோஷப் பிரமணியம் இருந்ததால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதனால் நேபாளி படம் தோல்வினை அடைந்ததோடு அதிலிருந்து தனது கேரக்டரும் சரியா தொடங்கியதாக புலம்பியுள்ளார்.

இவ்வாறு பரத்தின் 50வது படமும் வெளியான நிலையில் தற்போது வரையிலும் முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை பிடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். எனவே விரைவில் இயக்குனர் வசந்தபாலனின் புதிய படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இதன் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment