சீரியல் நடிகரை வண்டவண்டயாக திட்டி தீர்த்த ரசிகர்கள்.! கோபி வெளியிட்ட வீடியோவை பார்த்தீர்களா.!

தமிழ் தொலைக்காட்சிகளுகிடையே அதிக போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் டி ஆர் பி யில் முதலிடத்தைப் பிடிக்க பல்வேறு தொலைக்காட்சிகளும் புதிது புதிதாக நிகழ்ச்சியையும் சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதேபோல் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல்களை ஒளிபரப்பி பல தொலைக்காட்சிகள் போராடி வருகிறார்கள்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சி படத்தின் தலைப்பை வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, அஞ்சலி, அரண்மனைக்கிளி, மௌன ராகம், சின்ன தம்பி, என பல சீரியல்கள் படத்தின் தலைப்பை வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த லிஸ்டில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தமிழில் பல கொரியன் தொடர்களை டப் செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் வங்காள சீரியலை தழுவி தான் இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு என  பல மொழிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியல் இல்லத்தரசிகள் பொறுப்புகளை எடுத்துரைக்கும் வகையிலும் அவர்கள் படும்பாடு களையும். சில சமயம் கணவன் பிள்ளைகள், மாமியார், மாமனார்,  இல்லத்தரசிகளை எப்படி அவமதிக்கிறார்கள் என்பதையும் காட்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது.

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் அனுசரித்து தான் போகிறாள் ஒரு கால கட்டத்தில் அவரின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டு எடுத்தால் என்பது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் பாக்கியலக்ஷ்மி கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக கோபிநாத்தும் நடித்து வருகிறார்கள். கோபிநாத்தன்னுடைய முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருப்பதாக இந்த சீரியலில் காட்டியுள்ளார்கள்.

இதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள் இந்த கோபி ைபயன பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது நல்ல பொண்டாட்டி கிடைத்தும் அவனுக்கு கொழுப்பு தான் இப்படி செய்கிறான் என கமெண்ட் செய்து வந்தார்கள் ரசிகர்கள் இதைப்பார்த்த கோபிநாத் வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது எல்லோரும் கோபமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது அதற்கு நான் என்ன பண்ணமுடியும் முதலாளி பணம் தருகிறார் நான் நடிக்கிறேன். ஹீரோவாக நடிப்பதில் என்ன சுவாரஸ்யம் சோகமாகவும் மூஞ்ச வச்சிக்கிட்டு நடிக்கணும் ஆனால் வில்லனாக நடித்தால் சுவாரசியம் காட்டமுடியும் எல்லாவற்றுக்கும் மேலாக அது வெறும் கதைதான் அதனால் என்னை திட்டினாலும் கோபித்துக் கொண்டாலும் அது எனக்கு கிடைத்த விருதாக ஏற்றுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment