திடீரென்று இறந்த பாக்கியலட்சுமி சீரியல் ரியல் கோபி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீரென இறந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் மிகவும் சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலாக இருந்து வருகிறது.

எனவே டிஆர்பியிலும் முன்னணி வகித்து வரும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா, பாக்கியா கணவர் கோபி கபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். இந்த சீரியல் பெண்கள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் அனைத்தையும் சமாளிக்கும் திறமை அவர்களுக்கு இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்தும் வகையில் கதைக்கலாம் அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் ராதிகா கோபி இருவரும் பாக்கியாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் மேலும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என நினைத்து வருகின்றனர். ஆனால் ராதிகா பிடிவாதமாக இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என அங்கேயே இருந்து வருகிறார்.

மேலும் வீட்டில் நடப்பதை மனதில் வைத்துக் கொண்டு ஆபீஸிற்கு சென்றவுடன் ராதிகா பாக்யாவை வேலை செய்யவிடாமல் வம்பு வலத்துகிறார். இதனால் பாக்யா ஆத்திரமடைய பிறகு கேண்டீன் ஓனர் கோடீஸ்வரனிடம் ராதிகா மீது புகார் அளிக்கிறார். எனவே இதற்கு மேல் பாக்யாவை இப்படி தொந்தரவு செய்யக்கூடாது என கோடீஸ்வரன் ராதிகாவை கண்டிக்கிறார்.

பிறகு வீட்டிற்கு வந்தவுடன் பாக்யா தனது மாமியார் ஈஸ்வரிடம் சொல்ல இதனால் ராதிகாவை திட்டுகிறார் பயங்கரமாக சண்டை ஏற்படுகிறது அந்த நேரத்தில் கோபி வர கோபியும் ராதிகாவை கண்டிக்கிறார். இதனால் கோபமடைந்த ராதிகா வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் இதற்கு மேல் கோபி வீட்டிற்கு வருவாரா இல்லை தன்னுடைய வீட்டிலேயே இருந்து விடுவாரா என்ற திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் நடிகர் தற்பொழுது திடீரென இறந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பங்காளியில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஹிந்தியில் இந்த சீரியலுக்கு அனுபமா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படி பல திருப்பங்களுடன் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் தான் நடிகர் நிதேஷ் பாண்டே. இவர்தான் திடீரென தற்பொழுது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் எனவே இவருடைய இறப்பு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment