ஒரே பாலில் இரண்டு விக்கெட் எடுத்த நிலா பாப்பா..! ஈஸ்வரி செழியன் கிளீன் போல்ட்.. வைரலாகும் இன்றைய பாக்கியலட்சுமி முழு எபிசோட்

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையா சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இந்த  சீரியலில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி சீரியல்தான் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் கோபி முதலில் திருமணம் செய்து கொண்ட பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் தற்பொழுது வரை கோபி புலம்பி கொண்டே இருக்கிறார் நேற்றைய எபிசோடில் கூட கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பங்கமாய் மாட்டிக் கொள்ள பார்த்தார் இந்த நிலையில்  இன்றைய எபிசோட்டில் எழிலிடம் பாக்கியா தன்னுடைய பைக் ஏதோ சத்தம் வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார் அதற்கு எழில் நான் மெக்கானிக்கிடம் சென்று பார்த்து விட்டு வருகிறேன் என கூற இந்த நேரத்தில் யார் இருப்பார் என கூறுகிறார் பாக்யா.

அந்த சமயத்தில் இனியா உடன் சரன் பேசிக்கொண்டே சைக்கிளில் தள்ளிக் கொண்டு வருகிறார் அப்பொழுது எழில் மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை இனியா பார்த்து விடுகிறார் அதனால் அம்மா கண்டிப்பாக திட்ட போகிறார் என பயத்துடன் நிற்கிறார் உடனே சரண் ஹாய் ஆன்ட்டி என அங்கிருந்தபடி கட்டுகிறார் உடனே பாக்யாவும் ஹாய் எனக் கூறிவிட்டு பாக்கியாவும் எழிலும் பக்கத்தில் போகிறார்கள்.

அதேபோல் சரணும் அங்கிருந்து வருகிறார் இனியா அம்மா திட்டுவார் என பதட்டத்தில் இருக்கிறார் ஆனால் சரண் பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாக்கியம் சாப்பிட வா என கூற இப்ப பிரியாணி கிடைக்குமா என சரண் கேட்கிறார்  சரி நாளைக்கு வா பிரியாணி செஞ்சிடலாம் என கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் நிலா பாப்பா கதவு அருகில் நின்று கொண்டு ஈஸ்வரி பாட்டியை எட்டி எட்டி பார்க்கிறது அது மட்டும் இல்லாமல் பாட்டி நிலா பாப்பாவை அழைக்கிறார்.

அவரும் அருகில் செல்கிறார் பின்பு நிலா பாப்பா கட்டிலில் ஏறி உட்கார்ந்து கொண்டு பாட்டியிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்.அப்பொழுது ராமமூர்த்தி வருகிறார் ஈஸ்வரி இடம் நிலா பாப்பா அவங்க அப்பாவை பார்க்கவே இல்லை அதனால் எழில் அப்பாவா இருந்துட்டு போறான் ஆமா சந்தோசமா தான் இருக்கான் என ஈஸ்வரி இடம் ஆறுதல் கூறுகிறார் அதற்கு குழந்தை மேல யாரு கோபப்படுவா ஆனா எழில் மேலவும் அமிர்தா மேலயும் எனக் கோபம் இருக்குது a. எனக்கு கூறிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு நிலா பாப்பா கையில் முத்தமிட்டு பாட்டியை கவுக்குறார் இதை பார்த்த ராமமூர்த்தி இப்ப உன் கோபம் எங்க போச்சு என கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அமிர்தா சட்னி செய்ய வதக்கிக் கொண்டிருக்கிறார். ஜெனி சட்னி எப்படி செய்வது என அமிதாவுடன் கேட்டு தெரிந்து கொள்கிறார் அப்பொழுது செழியன் வருகிறான் ஜெனியை பார்த்து நீ ஏன் அடுப்பு பக்கத்துல நிக்கிற பாப்பாவுக்கு சுடும் என கூற அனைவரும் சிரிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் நிலா பாப்பா செழியனிடம் வந்து பெரியப்பா பெரியப்பா என கூற செரியனால் என்ன செய்வது என்று தெரியாமல் மொழி பிதுங்கி நிற்கிறார். பின்பு ஒரு வழியாக நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு ஓடி விடுகிறார் செழியன். அப்பொழுது நிலா பாப்பா  செழியணையும் கவுத்து விட்டார் என பாக்யா கூற ஜெனியும் செழியணை கவுக்கறது ரொம்ப கஷ்டம் அதையே செஞ்சாச்சு எனக் கூறிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த காட்சியில் பாக்யா இங்கிலீஷ் கிளாஸ்க்கு போகிறார் அங்கு அனைவரும் கற்றுக் கொண்டிருக்கும் பொழுது அருகில் உள்ளவர் உங்கள் கணவர் என்ன செய்கிறார் என பாக்கியவுடன் கேட்க பாக்யா முகம் வாடுகிறது. அதையெல்லாம் சமாளிப்பதற்காக பழனிச்சாமி அனைவரையும் டைவர்ட் செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

 

Leave a Comment