திரைப்படத்துக்கு வந்த போது அடக்க ஒடக்கமாக இருந்து! பின்பு கவர்ச்சி காட்டும் நடிகைகள்!!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போயிருக்கிறார்கள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தனது நடிப்புத் திறமையினால் இன்றுவரையும் திரையுலகில் ஜொலித்த வருகிறார்கள்.

சினிமாவில் பொதுவாக காணாமல் போன நடிகைகளின் லிஸ்ட் தான் அதிகம். அதற்கு முக்கியக் காரணம் வயது அதிகமாகி தனது உடல் தோற்றம் மிகவும் வயதானதாக தோன்றுவதால் படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள்.

ஆனால் நடிகர்களை பொருத்தவரை 70 வயதானாலும் கூட திரைப்படங்களில் நடித்து வருவார்கள். இவர்களுக்கு 70 வயது ஆனாலும் கூட ரசிகர்கள் பட்டாளம் இருந்தால் திரைப்படங்களில் நடிக்கலாம்.

ஆனால் ஹீரோயின்களுக்கு அந்த வாய்ப்பை நம் தமிழ்ரசிகர்கள் கொடுப்பதில்லை. பொதுவாக ஹீரோயின்கள் பிரபலமடைந்த பிறகு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் கவர்ச்சி என்ற ஒரு ஆயுதத்தை எடுத்து கொள்வார்கள்.அந்த வகையில் எந்த தமிழ் நடிகைகள் படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்கள் என்பதை தற்போது காண்போம்.

சதா-நடிகை சதா பிப்ரவரி 17, 1987ஆம் ஆண்டு ரத்னகிரி மகாராஷ்டிராவில் பிறந்தார். இவருக்கு தற்போது 35 வயதாகிறது இவருடைய அப்பா முஸ்லிம், இவருடைய அம்மா ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள். இவர் தெலுங்கில் ஜெயம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தார் அப்படங்கள் சொல்லும் அள்விற்கு ஓடவில்லை. இந்த நிலையில் ஜெயம் திரைப்படம் தமிழில் வெளிவந்தது.

இத்திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் ஜெயம் ரவியும், நடிகை சதாவும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள். இத்திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகை சதா தமிழ் திரைப்படங்கள் நடிக்க அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. என்பதால் தெலுங்கு திரையுலகிற்கு மீண்டும் போனார் அங்கும் சொல்லும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்திரன், அந்நியன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அந்நியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக இருந்த நடனமாடி இருப்பார். அதன்பிறகு கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பிரியசகி, உன்னாலே உன்னாலே உட்பட இன்னும் பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் தற்பொழுது தமிழ்சினிமாவில் எந்த ஒரு படங்களில் நடிக்காமல் காணாமல் போய்விட்டார். ஆனால் இந்தி சினிமாவில் இதைவிட அதிக கவர்ச்சி காட்டி இன்னும் நிலையாக இருக்கிறார்.

அசின்- நடிகை அசின் 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி பிறந்தார். தற்போது இவருக்கு வயது 33 இவர் கேரளாவில் கொச்சியில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரே மலையாள குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி உட்பட இன்னும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் டாப் ஹீரோக்களான தல, தளபதி இருவர் களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவ்வாறு ஃபேமஸ் ஆக இருந்து வந்த இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அதாவது தமிழ் சினிமாவில் நடித்தது போதும் ஹிந்தியில் நடித்து பிரபலம் அடைய வேண்டும் என்பதால் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க போய்விட்டார்.

பாலிவுட் என்றாலே கவர்ச்சிக்கு தான் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர் நடித்த முதல் படம் கஜினியிலேயே எவ்வளவு காட்ட முடியுமோ அவ்வளவு காண்பித்து விட்டார்கள். இதன் மூலம் ஹிந்தியில் நடிக்க இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த காவல்துறை படத்தில் தமிழுக்கு மீண்டும் வந்தார். இவர் இலங்கைக்கு போய்ட்டு வந்ததால் தமிழ் ரசிகர்கள் அசின் நடிக்கும் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனவே அவர் தமிழில் எந்த படமும் நடிக்காமல் காணாமல் போய்விட்டார்.

நயன்தாரா- நடிகை நயன்தாரா நவம்பர் 18 1984ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் ஒரு கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஐயா திரைப்படத்தில் மிகவும் அடக்கமாகவும் அழகாக இருப்பார். அதன்பிறகு சந்திரமுகி இவருடைய இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்திலும் மிகவும் அடக்க ஒடக்கமாக தான் இருந்திருப்பார். அதன் பிறகு இவருக்கு பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு கஜினி திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிக்கும் பொழுது எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். அதிலும் முக்கியமாக சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தில் எவ்வளவு வச்சி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நயன்தாராவை வைத்து செய்திருப்பார்கள். இதில் முக்கியமாக இதுவரையிலும் சொன்ன நடிகைகள் தற்போது வரை சினிமாவில் நிலைத்து நிற்கவில்லை. ஆனால் நயன்தாரா இன்றளவும் முன்னணி நட்சத்திரமாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காஜல் அகர்வால்- நடிகை காஜல் அகர்வால் ஜூன் 1985ஆம் ஆண்டு 19ஆம் தேதி பிறந்தார். தற்போது இவருக்கு வயது 33 ஆகிறது. ஹிந்தி திரைப்படத்தில் ஒரு மைனர் கேரக்டரில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பரத்துடன் இணைந்து பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இத்திரைப்படத்தில் மிகவும் அடக்க ஒடுக்கமாக இருந்திருப்பார். அதன்பிறகு சரோஜா திரைபடத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.

இதனைதொடர்ந்து பொம்மலாட்டம், மகதீரா போன்ற படங்களில் நடித்திருந்தார்.அதன் பிறகே தெலுங்கில் நடித்த படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து மாற்றான் திரைப்படத்தில் நடித்து மிகவும் கவர்ச்சி காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். தற்பொழுது அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அஞ்சலி-நடிகை அஞ்சலி 1986ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது 32 வயது ஆகிறது. இவர் தெலுங்கில் போட்டோ, பிலிம் மேகேரேசாஇந்த இரண்டு திரைப்படங்களில் நடித்துருந்தார்.இப்படங்கள் பெரியதாக சொல்லும் அளவிற்கு ஓடவில்லை.அதன் பிறகு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார்.இப்படத்திற்காக இவருக்கு சில விருதுகளும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திருப்பார். அதன் பிறகு இவருக்கு சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்பதால் கருங்காலி என்ற திரைப்படத்தில் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்ட வேண்டுமென்று அப்படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். எனவே இதனை ஒப்புக் கொண்ட அஞ்சலி கவர்ச்சி காட்டி திரையுலகை கலக்கி வருகிறார்.

Leave a Comment