12 வருடங்களுக்கு முன்பு எங்களுக்குள் நடந்த சண்டை.! விஜய் படத்தை பார்ப்பதும் இல்லை.! அவரிடம் பேசுவதுமில்லை ரகசியத்தை உடைத்த நெப்போலியன்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், விஜய் நடிப்பில் வெளியாகிய போக்கிரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நெப்போலியன் நடித்த போது, விஜய்க்கும் நெப்போலியனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அதை பற்றி நெப்போலியன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கொரனோ ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களை நேரடியாக பேட்டி எடுக்க முடியாமல், பல முன்னணி செய்தி நிறுவனங்கள் காணொளி மூலம் பேட்டி எடுத்து வருகிறார்கள், அந்தவகையில் சமீபத்தில் நடிகர் நெப்போலியன் அவர்களை பிரபலம் முன்னணி ஊடகமொன்று பேட்டி எடுத்துள்ளது.

அந்த பேட்டியில் நெப்போலியன் பல விஷயங்களை சுவாரசியமாக கூறியுள்ளார் அப்போது போக்கிரி படத்தில் விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை பற்றி முதன் முறையாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது போக்கிரி திரைப்படத்தில் பிரபுதேவாவிற்காக தான் நான் நடித்தேன். அந்த படத்தில் நடிக்கும்போது விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதே கிடையாது.

அதேபோல் அதன் பிறகு வெளியான விஜய் திரைப்படங்களை நான் பார்த்ததே கிடையாது, தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் விஜய் நடித்திருந்தார், இப்பொழுது மிகவும் கடினமாக உழைக்கிறார். அதனால்தான் அவர் இப்படி வளர்ச்சியை அடைகிறார், அது இருக்கட்டும் விஜய்க்கும் நெப்போலியனுக்கு என்ன கருத்து வேறுபாடு என பலரும் ஆராயத் தொடங்கினார்கள்.

அதுமட்டுமில்லாமல் விஜய்க்கும் நெப்போலியானுக்கும்  உள்ள கருத்து வேறுபாட்டை பற்றி கோடம்பாக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தார்கள் அப்பொழுது நெப்போலியனின் நெருங்கிய நண்பர்கள் சிலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள், நெப்போலியன் நண்பர்கள் சிலர் நெப்போலியன் போக்கிரி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விஜய்யை சந்திக்கலாம் என கேட்டுள்ளார்கள்.

அப்பொழுது நெப்போலியன் விஜயை சந்திக்க வேண்டும் அவ்வளவுதானே வாங்க போகலாம், அவரை சந்திப்பது மட்டுமல்லாமல் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம் என படப்பிடிப்பு தளத்திற்கு தனது நண்பர்களை அழைத்து வந்துள்ளார், அதன்பிறகு ஏற்பட்ட சம்பவம்தன் விஜய்க்கும் நெப்போலியனுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு, நெப்போலியன் மிகப்பெரிய நடிகர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதனால் விஜய்யை அன்றைய தினம் சந்திப்பதற்காக எந்தவொரு அனுமதியும் பெறாமல் அவருடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு விஜயின் கேரவன் வண்டியைத் திறந்துள்ளார். கேரவன் கதவுக்கு அருகே அமைந்திருந்த விஜய்யின் பாதுகாவலர் நெப்போலியனை தடுத்து நிறுத்தியுள்ளார், உடனே சார் உங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் நான் விஜய்யிடம் அனுமதி கேட்டு வருகிறேன் என கூறியுள்ளார் பாதுகாவலர்.

அதற்கு நெப்போலியன் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் உடனே படபிடிப்பு தளம் கலவரம் ஆகியது, சத்தம் கேட்டு விஜய் அங்கு வந்து நெப்போலியன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா என முகத்தில் அடித்தது போல் கோபமாக பேசியுள்ளார், அதுவும் நெப்போலியன் நண்பர்கள் முன்னிலையில் இதுபோல் கேட்டதால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக மாறிவிட்டது.

நெப்போலியன் வயதில் மூத்தவர், பெரிய நடிகர், மத்திய மந்திரியாக கூட பதவியில் இருந்தவர் அந்த உரிமையில் விஜய்யிடம் அனுமதி கேட்காமல் அல்லது நடிகர் விஜய் தம்பி போல் நினைத்துக் கூட ஒரு வித உரிமையில் அனுமதி கேட்காமல் விஜயை சந்திக்க முயற்சி செய்திருக்கலாம். அதேபோல் நடிகர் விஜய் மீதும் எந்த தவறும் இருக்காது படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்பொழுது டென்ஷன் சோர்வு எல்லாம் அந்த தளத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அப்படியான நேரத்தில் விஜய் இப்படி மோசமாக பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் இதில் யாருடைய செயலையும் நியாயப்படுத்த முடியாது இருவரும் செய்தது தவறுதான் என கூறப்படுகிறது, இந்த பலநாள் ரகசியம் தற்போது இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment