சூர்யா அருவா படத்தில் இணையாததால்.! உறவுக்கார நடிகருடன் கைகோர்க்க போகும் ஹரி.?

தமிழ் சினிமா உலகில் பெரும்பாலான இயக்குனர்கள் படம் வெற்றி பெற மசாலா கலந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்குவது உண்டு ஆனால் இதிலிருந்து மாறுபட்டு ஆக்சன் மற்றும் போலீஸ் நிறைந்த கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி அதில் வெற்றி பெறும் இயக்குனர்களில் ஒருவர் தான் ஹரி.

இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றி கண்டுள்ளார். அந்த வகையில் இவர் பெரிதும் வெற்றிகண்ட கூட்டணி என்றால் அது ஹரி சூர்யா தான் இருக்கும் இவர் சூர்யாவுடன் இணைந்து ஆறு, வேல், சிங்கம் பார்ட் போன்ற சிறப்பு கூறிய படங்களை இயக்கி இருந்தார். மேலும் சூர்யாவை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றார் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமா உலகில் வெற்றியை கொடுக்க முடியாமல்  போராடிவரும் சூர்யாவுக்கு மீண்டும் வெற்றியை கொடுக்க முனைப்பில் இறங்கிய ஹரி மற்றும் சூர்யா ஆகியோர் இருந்தனர் இப்படம் ஆரம்பிக்கும் முன்னனேரே  படத்திற்கு அருவா என பெயர் சூட்டப்பட்டது ஆனால் சூர்யா அவர்களோ அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளதால் இப்படத்தை தற்போது அவர் ட்ராப் செய்து உள்ளார்.

surya
surya

இதனால் ஹரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் சூர்யாவின் ஆதரவாளர்கள் சிலர் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.  சூர்யா படம் ஓகே சொல்லும் வரை பொறுமையாக இருக்க முடியாது என்பதால் அவரது மச்சனன் அருண் விஜய்யை  வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

arun vijay
arun vijay

தற்பொழுது அருண் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட்டிலிருந்து உள்ளதால் அவரை வைத்து இயக்கினால் மிகப்பெரிய வெற்றி அடையலாம் என ஹரி திட்டம் போட்டுள்ளார் மேலும் கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Comment