தமிழ்நாட்டில் பொங்கல் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் கேரளாவில் மிகவும் விமர்சையாக கொண்டாட கூடிய ஒரு பண்டிகை என்றால் அது ஓணம் பண்டிகை தான். இந்த பண்டிகையை கேரள மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவார்கள். அதேபோல் ஓணம் பண்டிகை வந்துவிட்டாலே பல நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவிப்பார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பல நடிகைகள் கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான் இந்த நிலையில் கேரளாவிலிருந்து வந்த நடிகைகளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அபர்ணா பாலமுரளி-தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியாகிய சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அபர்ணா பாலமுரளி. இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் பலரால் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் இவர் தற்பொழுது அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் இவரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு.
நடிகை அதுல்யா ரவி – இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவரின் கொள்ளை அழகில் ரசிகர்கள் பலரும் விழுந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும் இந்த அளவு அதுல்யா தன்னுடைய அழகால் ரசிகர்களை வசீகரித்து விட்டார் இவரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
ஜனனி அய்யர் – தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் ஜனனி ஐயர் இவர் திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் இவரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள புடவையில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
மீனாட்சி கோவிந்தராஜன் – விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி கோவிந்தராஜன் இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் அவர் நடித்துள்ளார் இவரும் கேரள புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து சிவாங்கியும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் சமூக வலைதளத்தை கிளுகிளுப்பாக்கிவந்த ஷிவானி நாராயணன் அவர்களும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆனால் மற்ற நடிகைகள் பலரும் ஓனம் புடவையில் வாழ்த்து தெரிவித்தார் ஆனால் ஷிவானி நாராயணன் ஒரு படி மேலே சென்று வெறும் ஜாக்கெட்டுடன் புகைப்படத்தை வெளியிட்டு ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.