பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் திடீரென தொகுப்பாளர் மாற்றமா.? கமலுக்கு பதில் யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கிட்டதட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவு இருந்து வருவதால் தமிழில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த மாதம் நிறைவுபெற்ற நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் 24 மணிநேரமும் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை கூறி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலர் உங்களுக்கு ஒரு மணி நேரம் நான் கட்டப்படுகிறது மீதி 23 மணி  நேரம் மறுக்கப்படுவதால் எங்களைப் பற்றி உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்று கூறி வந்ததாலும் விஜய் டிவி இந்த முடிவை எடுத்து உள்ளார்கள்.

இந்நிலையில் ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் எந்த போட்டியாளரும் சுவாரசியமாக விளையாடவில்லை என்ற கருத்தை நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கமல் வரும் சனி ஞாயிறு எபிசோடுகள் ரசிகர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தது இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று கமல் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினால் அடுத்த வாரத்திலிருந்து யார் தொகுப்பாளராக பணியாற்றுவார் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 5 கமலுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால் இரண்டு வாரங்கள் ரம்யாகிருஷ்ணன் பணியாற்றினார். அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன் வருவாரோ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Comment