விஜய் ஆண்டனியின் தந்தையும் இப்படித்தான்.. இதன் காரணமாகத் தான் மீராவும் தற்கொலை செய்துக் கொண்டார்.! பிரபலம் பேட்டி

Vijay Antony: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதி்ர்ச்சியை ஏற்படுத்தியது. 16 வயது மட்டுமே ஆகும் மீரா 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியானது.

இவருடைய இறுதி அஞ்சலிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் மீரா இது போன்ற ஆள் கிடையாது என கூறினார்கள். ஆனால் கடந்த ஒரு வருடமாக மீரா மிகவும் சோகமாக இருந்து வந்ததால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருக்கும் தனது தனி அறையின் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

எனவே இவருடைய இறப்பிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மீராவின் அம்மா எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சொல்லி இருக்கலாமே என்று கூறி அழுதார். இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் மீரா குறித்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறுகையில், தனிப்பட்ட முறையில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவை தனக்கு நன்கு தெரியும். பாத்திமா ஆரம்பத்தில் தொகுப்பாளராக சன் டிவியில் வேலை பார்த்து வந்தார் அப்பொழுது என்னையும் பேட்டி எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி, பாத்திமா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

பொதுவாக சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமல் போன்றவர்களுக்கும் இரண்டு மகள்கள் தான். அதேபோல் விஜய் ஆண்டனிக்கும் இரண்டு மகள்கள். ஆனால் மீரா என்பது சுத்த தமிழ் பெயர் விஜய் ஆண்டனி கிறிஸ்டின் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி தான் பெயர் வைக்க வேண்டும் ஆனால் அவரது மகளுக்கு ஏன் மீரா என்ற பெயர் வைத்தார் என்பது தெரியவில்லை.

மேலும் கடந்த ஒரு வருடங்களாகவே மீரா மன உளைச்சலில் இருந்ததால் அவரது வீட்டின் அருகிலுள்ள சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்க்கொண்டு இருக்கிறார். அதற்கான மாத்திரை அவரது ரூமில் இருந்திருக்கிறது அதுவும் இரவு ஒரு மணிக்கு மாத்திரையை போட்டுவிட்டு தண்ணீர் குடித்த பிறகு தான் தூங்கு சென்றிருக்கிறார்.

தற்கொலை என்பது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வந்து போகும் விஷயம்தான் அதை நாம் கடந்துவிட்டால் அதன் பிறகு வெற்றி தான் ஆனால் மீராவால் அதனை எதிர் கொள்ள முடியவில்லை. மேலும் தற்கொலை செய்யும் அளவிற்கு இந்த சின்ன வயதில் மீராவுக்கு என்ன பிரச்சனை என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தான் மிகப்பெரிய விபத்திலிருந்து விஜய் ஆண்டனி மீண்டு வந்தார். இப்பொழுது அவரது மகள் இழப்பு அவருக்கு மிகப்பெரிய துயரத்தைக் கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் இப்பொழுது மகளும் அதே முடிவை எடுத்துக் கொண்டதால் ஜெனிடிக் பிரச்சினையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.