பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பாடிபில்டர் நடிகரா.? அப்போ வீடு ரெண்டு தானா..? பதறி அடித்து போய் விளக்கம் கொடுத்த பிரபலம்

Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் கிட்டத்தட்ட 6 வருடங்களாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு உலகில் இருக்கும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக் க்ஷபாஸ்.

இந்நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கும் நிலையில் விரைவில் 7து சீசன் தொடங்க இருக்கிறது. ஆறு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் தான் ஏழாவது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். எனவே பங்கு பெறுவதற்காக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயக்கம் காண்பித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் இருந்தாலும் ஆனால் நெகட்டிவ் கமெண்ட் பெற்று விட்டால் அந்த பிரபலத்தை ரசிகர்கள் வச்சி செய்துவிடுவார். எனவே இதன் காரணமாக பலரும் கலந்து கொள்ள ஆர்வம் காமிக்காமல் இருந்து வருகிறார்கள்.

இந்த சூழலில் 7வது சீசன் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் யார்? யார்? பங்கேற்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் தொடர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்படி தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள இருக்கிறாராம்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருக்க போகிறது என தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இதற்கு தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் சண்டை போட வேண்டும் ,லவ் பண்ண வேண்டும் அது எல்லாம் நமக்கு செட்டாகாது எனவே விஜய் டிவி எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக மாட்டேன் என உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.