குண்டு கட்டாக பாவணியை தூக்கிய அவரது கணவர்.! வைரலாகும் திருமண வீடியோ.!

ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மாலை கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தைக் அடைந்துள்ளது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஐந்தாவது சீசனில் தான் திருநங்கை கலந்து கொண்டார் ஆனால் நமிதா மாரிமுத்து சில பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதேபோல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முகம் தெரியாத நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபர் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, என ஒரு சிலர் மட்டும்தான்.

மற்றபடி பல முகம் தெரியாத நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அதேபோல் அதேபோல் சின்னத்திரை சீரியல் நடிகை பவானி ரெட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் இவர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நபர் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் திருமணமான எட்டாவது மாதத்தில் 2017 மே மாதம் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். பாவனி ரெட்டி கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமாக பேசினார். மேலும் தனது கணவர் இறந்த பிறகு அவரின் நெருங்கிய நண்பர் ஒருவருடன் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் சமூகவலைதளத்தில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று விட்டது என விமர்சனம் எழுந்தது இது குறித்து அவரின் சகோதரி ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் கூறியதாவது அவர் கணவர் இறப்பிற்கு பிறகு மறுமணம் செய்து கொள்ள விரும்பியது உண்மைதான் ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக இருவரும் பிரிந்து விட்டார்கள் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாவனி ரெட்டியின் திருமண வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதில் பாவணி ரெட்டியை குண்டுகட்டாக அவரின் கணவர் தூக்கி திருமண சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ.

Leave a Comment