பாலாவின் முன்னாள் மனைவி இப்ப இந்த தொழிலதிபர் பிடியில்.! பரபரப்பை கிளப்பிய பயில்வான்..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பாலா தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். மேலும் இயக்குனர் பாலாவின் திரைப்படங்களில் நடிகர், நடிகைகளிடம் கண்டிப்பாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் ஆஸ்திரேலியா தொழிலதிபருடன் அடுக்குமாடி குடியிருப்பில் கும்மாளம் போட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.

சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம் பல விருதுகளையும் பெற்றார் தற்பொழுது இவர் சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தின் இயக்கி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் பாலா கடந்த 2014ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் இந்நிலையில் திருமணமான 18 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் இருவரும் விவாகரத்து பற்றிய பிரிந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் பாலாவும் அவருடைய மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் அதற்கு அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன் தான் காரணம் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது பத்திரிகையாளரும் நடிகருமான வயல்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அதாவது இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் ஆஸ்திரேலியா தொழிலதிபர் தான் என கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதன் மேலும் இதனை தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய இவர் இயக்குனர் பாலாவும் அவரது மனைவியுமான மலரும் விவாகரத்தில் உறுதியாக உள்ளனர்.

bala
bala

விவாகரத்துக்கு காரணம் பாலாவின் மனைவிக்கு அரசியல் பிரமுகரின் மகன் ஒருவருடன் ஏற்பட்டது தொடர்பான பேசப்பட்டது. மேலும் புதிய தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது போலீசார் தகவல் எனவும் கூறப்படுகிறது அதாவது இருவரும் பிரிந்துள்ள நிலையில் மலர் பாலா தங்கி உள்ள குடியிருப்பில் தான் வசித்து வருகிறாராம் மே எட்டாம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு ரமேஷ் ராய் என்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் வந்துள்ளார்.

ரமேஷ் ராய்க்கு முதலில் பாலா உடன் தான் நட்பு ஏற்பட்டது ரமேஷ் ராய் வெளிநாட்டில் உள்ள சுரங்கங்களில் வேலை பார்க்க ஆட்களை அனுப்பும் தொழிலை செய்து வருகிறாராம். மேலும் சென்னையில் அவருடைய நிறுவனத்தின் கிளைகள் இருப்பதாகவும் இயக்குனர் பாலாவின் மனைவி முத்து மலர் தான் அதனை தொடங்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவருடன் நெருங்கி பழகி உள்ளார் மலர் இந்த விஷயம் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தெரியும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment