பாலாஜி சொன்னதெல்லாம் பொய்யா!! இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தோம்… வருத்தத்தில் பாலாஜியின் பெற்றோர்..

balajimurugadasss parents feeling worried about their son false allegation on them: பாலாஜி முருகதாஸ் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் மிஸ்டர் இந்தியா பட்டங்களைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் திரைப் படங்களில் வில்லனாகவும் நடித்து கொண்டிருக்கிறார்.

இவர் பிக்பாஸில் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என கூறி தனது அப்பா அம்மாவை குடிகாரர்கள் என்னை சரியாக வளர்க்கவில்லை என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை அதுமட்டுமல்லாமல் குடித்துவிட்டு கேஸ் பைப்பால் இரவில் என்னை அடிப்பார் என பல குற்றச்சாட்டினை தனது பெற்றோர் மீது வைத்து அவரும் அழுது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் அழ வைத்தார்.

மேலும் இந்த சூழ்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் பெற்றோர்களைப் பற்றி பேசியது பொய் என சமூக வலைதளங்களில் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது உண்மை வெளியாகி உள்ளது அதில் பாலாஜி முருகதாஸின் அப்பா ஒரு பிசினஸ்மேன் என்றும் அவரது அம்மா ஒரு ஹவுஸ் ஒய்ப் எனவும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பாலாஜி முருகதாஸ் சென்னையில் உள்ள மிகச்சிறந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்ததாகவும் கூறியுள்ளனர்.மேலும் பாலாஜி முருகதாஸ் பேசியதை கேட்ட அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் உலகமே பார்க்கும் நிகழ்ச்சியில் தங்களை குடிகாரர் எனக்கூறி அசிங்கப்படுத்தி விட்டானே.

இப்படி பேச வா அவனை இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தோம் எனவும் விளையாட்டுக்காக  இவ்வளவு சுயநலமாக இருப்பதா என வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Comment