உன்னை தூக்கி விட்டவன் நான்.. சூர்யாவை நேரம் பார்த்து நோகடித்த பாலா.. வெளிவரும் உண்மை

Surya : இயக்குனர் பாலா சேது,  பிதாமகன், நந்தா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தன்னை வளர்த்துக் கொண்டார் மேலும் தன்னுடன் பணியாற்றிய நடிகர்களையும் உயர்த்தி விட்டு உள்ளார் குறிப்பாக நடிகர் சூர்யாவை உச்ச நட்சத்திரமாக மாற்றிவிட்டதே பாலா தான். நந்தா, பிதாமகன், அவன் இவன் ஆகிய படங்களை தொடர்ந்து வணங்கான்..

திரைப்படத்தில் பாலா சூர்யாவை வைத்து இரண்டு ஷூட்டிங்  வெற்றிகரமாக முடிந்த நிலையில் திடீரென சூர்யா பாலாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக மொத்தமாக வெளியேறினார் அதன் பிறகு பாலா அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்து வருகிறார். படம் சிறப்பாக வந்துள்ளதாக பலரும் கூறி உள்ளனர்.

இது யாரு என் மகள் மாதிரி.. முந்திக்கொண்டு முதல் ஆளாக தனுஷ் குடும்பத்திற்கு உதவி செய்த கேப்டன்.. வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..

சூர்யா வணங்கான் படத்திலிருந்து வெளியேறிதற்கான காரணங்களை தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்.. பிதாமகன் நந்தா போன்ற படங்களில் எப்படி வேலை வாங்கினாரோ அதேபோலவே சூர்யாவை கையாண்டு உள்ளார் ஆனால் இது சூர்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

ஒரு கட்டத்தில் பாலா மீது கோபத்தை வெளிப்படுத்த முடியாததால் அசிஸ்டன்ட் இயக்குனர்களை அழைத்து அவர்களிடம் கடுமையாகவும், அநாகரிகமாகவும் திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா மறைமுகமாக பாலாவை திட்டுவதை பலரும் நன்கு அறிந்திருந்தனர். ஒரு கட்டத்தில் பாலாவும் அறிந்து உள்ளார்.

யார பின்னுக்கு தள்ள பாக்குறீங்க முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்..! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா..

பிறகு சூர்யாவை வச்சு  செய்ய ஆரம்பித்தார் உச்சி வெயிலில் சூர்யாவை ஓடும் காட்சியை மீண்டும் மீண்டும் ரீடேக் செய்து உள்ளார் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அவர் வணங்கான் படத்திலிருந்து வெளியே தாக கூறப்பட்டது இந்த நிலையில் சூர்யா வெளியேறியது குறித்து பத்திரிகையாளர் சபைர் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் பாலா நந்தா படத்தில் சூர்யாவை நடத்தியது போலவே இந்த படத்திலும் நடித்திருக்கிறார் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவை கடுமையாக வேலை வாங்கி இருக்கிறார் சூர்யா தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பாலாவிடம் தெரிவித்துள்ளார் அதற்கு பாலா உனக்கு என்ன பீரியட்சா கேட்க படபிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு மாதிரியாக பார்த்து உள்ளனர் சூர்யாவுக்கு அது ஒரு மாதிரி அசிங்கமாக போக சூர்யா பாலா இருவரும் இடையில் மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version