முன்னணி நடிகர்களுடன் சேராத பாலா..! உள்ளே மறைந்திருக்கும் உண்மையான காரணம்.!

இயக்குனர் பாலா தமிழ் சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு பிடித்த திரைப்படமாக இருந்து வந்துள்ளன இருப்பினும் இவர் ஏன் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்கவில்லை என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதற்கு காரணம் பல விஷயங்கள் இருக்கின்றன. பாலா ஒரு படத்தை எடுக்கிறார் என்றால் குறைந்தது இரண்டு மூன்று வருடங்கள் இழுத்து விடுவார், இதனால் டாப் ஹீரோக்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகினாலும் நடிக்க முடியாமல் போய்விடும். மேலும் பாலா இயக்கும் படங்களில் பெரும்பாலும் ஹீரோக்கள்.

பெரிய அளவு ஹீரோயிசம் காட்ட முடியாது ஒரு சாதாரண குணச்சித்திர கதாபாத்திரம் எப்படி வந்து போகிறதோ அது போல் தான் ஹீரோவும் நடிக்க முடியும்.இயக்குனர் பாலா கதையின்படி தான் நகர வேண்டும் என ஒரே பிடிவாதம் கொண்டவர் ஆனால் டாப் ஹீரோக்கள் தனது ரசிகர்களுக்கு ஏற்றார் போல பாடல்கள் ஆக்சன் காட்சிகள் இருக்க வேண்டுமென பிடிவாதம் பிடிப்பார்கள்.

இதனால் டாப் ஹீரோவுக்கும் பாலாவுக்கும் சுத்தமாக செட் ஆகாது.இயக்குனர் பாலா இதுவரையில் பல நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் ஆனால் படத்தின் கதையை எப்பொழுதுமே முழுவதுமாக சொல்ல மாட்டாரு ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்று என்ன தேவையோ அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான கதையை மட்டுமே சொல்லுவார்.

மேலும் பாலா இயக்கும் படங்களில் பெரும்பாலும் நடிகர்கள் அழகாக இருக்க மாட்டார்கள். கதைக்கேற்ற போல அழுக்கான முகம், அழுக்கான துணிகளை போட்டுக் கொண்டுதான் நடிக்க வேண்டியதாக இருக்கும். இந்த காரணங்களால் தான் பாலா படத்தில் எந்த ஒரு முன்னணி நடிகரும் நடிகர் விரும்புவதில்லை அவரும் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுக்கவும் மாட்டார்.

 

Leave a Comment