நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர் பாலா.! புலம்பும் பிரபல நடிகை.. இப்படி ஆசை காட்டி மோசம் செய்து விட்டாரே..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா இவர் இயக்கும் அனைத்து படங்களும் மாறுபட்ட கதைகளை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுண்டு. இப்படி தனக்கென ஒரு பாணியில் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பாலா தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றியதாக அந்த நடிகை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அதாவது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வனங்கான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2d என்டேர்டேய்மென்ட் நிறுவனம் தயாரித்து வந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடலோரப் பகுதியில் உருவாக்கப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து இந்த படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு இந்த கதை சூர்யாவிற்கு சரியாக அமையாததால் இந்த படத்தில் இருந்து சூர்யா தானாகவே விலகி விட்டார் என்று ஒரு அறிவிப்பை பாலா அவர்கள் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வணங்கான் படத்தில் ஷூட்டிங் தற்போது தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் சூர்யாவிற்கு பதில் அருண் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வணங்கான் படத்தில் முன்பு சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்க இருந்தது.

ஆனால் வணங்கான் படத்தில் சூர்யா நீங்கியது போல இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டியையும் பாலா அவர்கள் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வகையில் வணங்கான் படத்தில் கீர்த்தி செட்டிக்கு பதிலாக ரோகிணி பிரகாஷ் என்ற இளம் நடிகை நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இயக்குனர் பாலா தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று நடிகை கீர்த்தி செட்டி தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment