விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது எதற்கும் துணிந்தவன் மற்றும் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நடிகர் சூர்யாவை உயர்த்தியது என்றால் அது இயக்குனர் பாலா தான். இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அதற்கு ஏற்றவாறு நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் சூர்யா.

அந்த வகையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் நடிகர் சூர்யா. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த திரைப்படத்தில் பாலா மற்றும் சூர்யா இவர்கள் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

surya
surya

பாலா இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் முதலில் அதர்வா அவர்கள் கதா நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் சூர்யா அவர்கள் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது சூர்யா மட்டும்தான் அந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதர்வா நடிக்கும் படத்தை இந்த படம் முடிந்தவுடன் எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி விட்ட நிலையில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment