ஐஏஎஸ் அதிகாரி என்று கூட பார்க்காமல் வாய்ப்பு கேட்டு வந்தவரை தகாத வார்த்தையால் திட்டிய பாலா.! தலைக்கனத்தால் அழிவை சந்திக்க போகிறாரா.?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாலா இவர் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதோடு மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படங்களில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தயங்குவது வழக்கம் ஏனென்றால் இவர் படப்பிடிப்பின் பொழுது அந்த அளவிற்கு மிகவும் கடுமையாக நடந்து கொள்வாராம்.

அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலும் இவர் யாருக்கும் மரியாதை தர மாட்டார் எனவும் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை கெட்ட வார்த்தையால் பேசியுள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தற்பொழுது பாலா இயக்கத்தில் வனங்கான் திரைப்படம் உருவாகி வந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்காமல் வெளியேறினார்.

எனவே தற்பொழுது புதிய ஹீரோவை பாலா நடிக்க வைக்க இருக்கிறார் மேலும் இயக்குனர் பாலா படப்பிடிப்பின் பொழுது சில சமயம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என பல செய்திகள் வெளியான நிலையில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஒருமுறை பாலாவிடம் நடிக்க வேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சென்றுள்ளார்.

அப்பொழுது பாலா சார் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நீங்க வெயிட் பண்ணுங்க என அவரிடம் அலுவுலகத்தில் இருக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார் அப்பொழுது இயக்குனர் பாலா வரும் நேரத்தில் அந்த ஐஏஎஸ் அதிகாரியை பார்த்து யார் இந்த**** என்று பாலா கேட்டுள்ளார். அதற்கு அந்த அதிகாரி ஷாக்கான நிலையில் அதன் பிறகு பாலா நீ ஒழுங்கா நடிக்கலாம் குரவளையை புடிச்சு கடிச்சு புடுவேன் என்று பாலா கூறியுள்ளார்.

எனவே அதன் பிறகு வெளியே வந்த ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணனிடம் எனக்கு நடிப்பு வேண்டாம் பென்ஷன் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்து விடுவேன் என கூறினாராம் இது குறித்து தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment