சூர்யாவை துரத்தி விட்டுட்டு நடிகையை பக்கத்திலேயே டாரா போட்ட பாலா…! உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்..

சினிமா துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பற்றி எந்த ஒரு பயமும் இல்லாமல் சர்ச்சைக்குரிய தகவல்களை கூறிவருபவர்தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து ஏராளமான முன்னணி பிரபலங்கள் பற்றிய அவதூறான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வணங்கான் படம் டிராப் ஆனதற்கு காரணம் குறித்து இவர் பேசியுள்ள தகவல் பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படிப்பட்ட நிலையில் இதற்கு முன்பு பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் இவ்வாறு சூரியா இந்த அளவிற்கு சினிமாவில் பிரபலமடைவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் தான்.

இப்படிப்பட்ட நிலையில் பாலாவின் மனைவி முத்துமலர் சமீபத்தில் அவரை விவாகரத்து செய்தார் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் சட்ட ரீதியாக தற்பொழுது பிரிந்து உள்ளார்கள் மேலும் பாலாவின் மகள் தன்னுடைய அம்மா முத்து மலருடன் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாலா இயக்க சூர்யா நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாக முடிவெடுத்து இருந்தது இப்படிப்பட்ட நிலையின் நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் நிலையில் இந்த படத்தினை இவர்களே தயாரித்தார்கள்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்தார் மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது இந்நிலையில் இந்த படத்தில் இருந்து திடீரென சூர்யா விளக்குவதாக தகவல் வெளியானது மேலும் அதற்கான அறிக்கையை பாலா வெளியிட்டு இருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது அது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது அதில் இயக்குனர் பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை என பேச்சு எழுந்ததாக கூறியுள்ளார். ஆனால் பாலா இதனை மறுத்து வந்தார் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் ராமேஸ்வரத்தில் படபிடிப்பு தொடங்கிய பொழுது ஹோட்டலில் தங்கி இருந்த பாலா தனது அறைக்கு அருகில் நடிகை கீர்த்தி செட்டிக்கு ரூம் போட்டு கொடுத்ததாகவும் நடிகர் சூர்யாவுக்கு 15 கிலோமீட்டர் தொலைவு தள்ளி ரூம் போட்டு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அடுத்த கட்ட படப்பிடிப்பை கோவிலில் நடக்க வேண்டும் என்று பாலா கூறியதாகவும் ஆனால் அதற்கு சூர்யா மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு விஷயத்திலும் பாலா திமிராக நடந்து கொண்டது சூர்யாவிற்கு பிடிக்கவில்லை எனவே தான் மனங்கண் படத்தை ட்ராப் செய்ய காரணம் என கூறியுள்ளார்.

Leave a Comment