அஜித்தை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய பாலா.! அந்த எட்டப்பன் வேலையை செஞ்சது யார் தெரியுமா..?

சில வருடங்களுக்கு முன்பாக தல அஜித்தை வைத்து பாலா ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளி வந்தன ஆனால் பாலாவின் படத்தில் கதாநாயகனின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் பாலா திரைப்படத்திற்காக அஜித் மிக நீண்ட தலை முடி தாடி ஆகியவற்றை வளர்த்துள்ளார்.

ஆனால் பாலாவோ  இந்த திரைப்படத்தில் ஆர்யாவை தேர்வு செய்து விட்டார் ஆனால் முதன்முதலாக பாலா அஜித்தை வைத்து தான் நான்கடவுள் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார் இதற்காக தயாரிப்பாளரிடமிருந்து  ஒரு அட்வான்ஸ் தொகை கூட அஜித்திற்கு கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அஜித் மற்றும் பாலா இது குறித்து ஹோட்டல் ஒன்றில் பேசி உள்ளார்கள் அப்பொழுது பைனான்சியர் அன்பு செழியன் மற்றும் தேனப்பன் அருள்பதி  ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள் இந்நிலையில் அப்பொழுது பேச்சு வார்த்தையின் பொழுது அஜித்தை தாக்கி உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. அது மட்டும் இல்லாமல் தயாரிப்பு தரப்பில் இருந்து பணத்தை வட்டியும் முதலுமாக அஜித்திடம் கேட்டுள்ளார்கள்.

ஆனால் அஜித் இந்த திரைப்படத்திலிருந்து நான் ஒதுங்க வில்லை என்று கூறியுள்ளார். மேலும் பட குழுவினர்கள் தான் அஜித்தை இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என நிராகரித்துள்ளார்கள். ஆகையால் அஜித் தரப்பிலிருந்து கொடுத்த பணத்தை மட்டுமே திருப்பி கொடுப்போம் என கூறியுள்ளார்கள்.

அதன் பிறகு கோபத்தில் தல அஜித் அவர்கள் இன்று உங்கள் பணத்தை கொடுத்து விடுகிறேன் என கூறியது மட்டும் இல்லாமல் சொன்ன வார்த்தையை அப்படியே காப்பாற்றி உள்ளார் ஆனால் அங்கு எந்த ஒரு கைகலப்பு பிரச்சனைகளும் நடைபெறவில்லை இதனை பாலா பேட்டியில் அவரே கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த பிரச்சனை அனைத்திற்கும் காரணம் அன்புச்செழியன் தான் என அவரே சொல்லாமல் சொல்லி உள்ளார்.

Leave a Comment