பாட்டியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ராதிகா! பார்த்து சிரிக்கும் பாக்கியா, செல்வி.

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் மையூரியை போய் பார்த்துட்டு வந்தியா எப்படி இருக்கா என கேட்க அதற்கு ராதிகா பதில் சொல்லாமல் கோபமாக போகிறார். இதை பார்த்த பாட்டி எப்படி திமிரா இருக்கா பாரு  என சொல்கிறார். அதற்கு இனியா அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டாங்க என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகா கீழே தண்ணி எடுக்க வருகிறார். உடனே பாட்டி ராதிகாவிடம் உனக்கு வேற வேலையே இல்லையா அவன் கிட்ட எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே தான் இருப்பியா அவனுக்கே ஏற்கனவே உடம்பு சரியில்லை என கூறுகிறார். அதற்கு ராதிகா நீங்க மாமா கிட்ட சண்டை போடறத விடவா நான் போட்டுட்டேன்.

உங்களுக்கு முன்னாடி நாலாம் ஒண்ணுமே இல்ல என பதிலுக்கு பதில் திமிராக பேசுகிறார். அதைப் பார்த்து செல்வி, இனியா, பாக்யா என அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்கின்றனர். உங்க பையன் நிறைய பொய் சொல்லுவாரு, ஏமாத்துவாரு அதெல்லாம் பாத்துட்டு நான் சும்மா இருக்கணுமா அதனால் தான் சண்டை போடுறன் என கூறுகிறாள். அதோட மட்டுமில்லாமல் ஈஸ்வரியை பார்த்து உங்களோட வளர்ப்பு சரியில்லை ஆனா நீங்க கவலைப்படாதீங்க இனிமே நான் அவரை திருத்திடுவேன் என சொல்லிட்டு போகிறாள். உடனே பாட்டி எப்படித்தான் இவ கூட அவன் குடும்பம் நடத்துறானோ என கூறுகிறாள்.

பாக்யா ரெஸ்டாரண்டுக்கு போகிறார். அங்கு அமிர்தாவை பார்த்து  எப்படிமா வியாபாரம் போகதுன்னு பேசிக் கொண்டே உள்ளே பார்க்கிறார். ஒருவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  உடனே கிச்சனுக்கு சென்று சமைத்த உணவை பார்க்கிறார். பாதிக்கு மேல் அப்படியே இருக்கு அதுமட்டுமல்லாமல் செல்வி வந்து பாக்கியாவிடம் அக்கா சமைச்ச சாப்பாடு எல்லாம் நிறையவே இருக்கு என்ன பண்றது மினிஸ்டர் வந்து திறந்து வச்சாங்க நிறைய பேர் வருவாங்கன்னு பார்த்தோம் கடைசில சாப்பாடு நிறைய மீந்து போயிடுச்சு, என்னக்கா பண்றது 150 பேருக்கு சமைச்சோம். ஆனால் 50 பேர் கூட சாப்பிடல எனக் கூற உடனே பாக்யா திறந்து ஒரு நாள் தான ஆகுது அப்படித்தான் இருக்கும் போக போக சரியாயிடும் எதையும் நெகட்டிவா திங்க் பண்ண கூடாது என கூறிவிட்டு. அமிர்தாவை கூப்பிட்டு குழந்தைங்க காப்பகத்திற்கு சாப்பாடு அனுப்பி வைக்கலாமான்னு போன் பண்ணி கேளுமா என சொல்கிறார்.

அடுத்த சீனில் பாக்யா வீட்டுக்கு சென்று மாமா சாப்பாடு எடுத்து வைக்கவா மாத்திரை முழுங்கிட்டீங்களா என கேட்கிறார். அதற்கு தாத்தாவும் பாட்டியும் ஏம்மா காலையிலேயே சீக்கிரமா எழுந்திருச்சு எல்லா வேலையும் செஞ்சு வச்சுட்டு போயிட்ட நீ சமைச்சு வச்சத கூட நாங்க போட்டு சாப்பிட மாட்டேமா. ஏம்மா இப்படி  அலையுற சரி வந்துட்ட போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என தாத்தாவும் பாட்டியும் சொல்கின்றனர்.

உடனே பாக்யா செழியன் கார் வெளிய நிக்குது இன்னைக்கு வேலைக்கு போகலையா என தாத்தாவிடம் கேட்கிறார். அதற்கு தாத்தாவோ இல்ல வீட்ல இருந்தே வேலை பாக்குறான் என சொன்னதும் பாக்யா செழியனை  பாக்க ரூமுக்கு போகிறார். செழியன் அங்கு சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். செழியா  சாப்பிட்டியா  ஏன் இப்படி சோகமா இருக்க இப்புடி இருந்தா எல்லாம் சரியாயிடுமா என கேட்டுட்டு சாப்பிட கீழே அழைத்து வருகிறார்.

அடுத்த சீனில் கோபி, தாத்தா, பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று  செழியன், ராதிகாவையும் கூப்பிட்டு  நான் புது பிசினஸ் பண்ண போறேன் அதாவது கிளவுட் கிட்சன் ஆரம்பிக்க போறேன் என சொல்கிறார். அப்படி சொல்லும் போதே திமிராக பாக்யாவை பார்க்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.