கோபி செய்த வேலையை தெரிந்து கொண்ட நண்பன்! ஆள விடுடா இனிமே ஒன் சவகாசமே வேணாம் என வெறுத்து ஒதுக்கிய செந்தில்..

பாக்கியலட்சுமி  இன்றைய எபிசோடில் செழியன் ஜெனியை வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்கிறார் அப்படி போகும் போது  ஐந்து நிமிடம் ஜெனியிடம் பேச வேண்டும் என கேட்கிறார்.அதற்கு ஜெனி முடியாது என மறுத்து விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து ஜெனியின் வீட்டில் ஜெனி வரவில்லை என அவரது அப்பா அம்மா கோபமாக இருக்கின்றனர் அப்போது செழியன் காரில் ஜெனி வந்து இறங்குவதை பார்த்த அவர்களுக்கு கோபம் இன்னும் அதிகமாகி செழியனை திட்டுகின்றனர்.

ஜெனியை உள்ளே அழைத்துச் சென்று உனக்கு சீக்கிரம் டைவர்ஸ் வாங்கி இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறேன் என அவரது அப்பா சொன்னதும் ஜெனி நான் இன்னும் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரல அதுக்குள்ள அடுத்த கல்யாணமா என கோபமாக பேசுகிறார். நீ என்ன சொன்னாலும் சரி உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்க தான் போறேன் என அவரது அப்பா கூறுகிறார்.

அடுத்த சீனில் கோபியை பார்க்க அவரது நண்பன் செந்தில் வருகிறார்.  உன்கிட்ட நான் மினிஸ்டர் என் மச்சான் ஸ்கூலுக்கு அழைச்சிட்டுவான்னு உதவி கேட்டனா இல்ல இல்ல. நீனே  தான்டா பேசி அவங்க வராங்கன்னு சொன்ன. ஆனா மினிஸ்டர் வராம அந்த நேரத்துக்கு பாக்யாவோட ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு போயிட்டாங்க. இதனால்  எங்க ஸ்கூலோட நல்ல பேரை போயிடுச்சு அது மட்டும் இல்லாம எங்க குடும்பத்துலயும் என்னோட பேரும் கெட்டு போயிடுச்சு. ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் அவங்க பேரன்ட்ஸ கூட்டிட்டு வந்துட்டாங்க மினிஸ்டர் வரவில்லை என்கிறது ஒரே அவமானமா போயிடுச்சு. அது மட்டும் இல்லாம மினிஸ்டர் பி ஏ கிட்ட நான் கொடுத்த பணமும் இனிமே அவ்வளவுதான். உனக்கு நான் என்னடா துரோகம் செஞ்சேன் இனிமே நீ என் மூஞ்சிலியே முழிக்காதடா என கோபமாக பேசிவிட்டு செந்தில் சென்று விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில் பாக்கியா வீட்டில்  தாத்தா பாட்டி இனியா மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா வந்து தாத்தாவிடம் மாத்திரை முழுங்ட்டிங்களா எடுத்து வரவா என கேட்கிறார். அதற்கு அவர் நான் அப்புறம் முழுங்குகிறேன் எனக் கூறுகிறார். அப்போது இனியா ராதிகாவிடம் ரெஸ்டாரன்ட் போட்டோ பாக்கறீங்களா என கேட்கிறார். அப்படி போட்டோவை காட்டும் போது அதில் கோபி இருப்பதை பார்த்து விடுகிறார். உடனே அந்த போட்டோவை எனக்கு அனுப்பு இனியா என சொல்லிவிட்டு மேலே செல்கிறார்.

மேலே சென்றதும் கோபியிடம் இன்னைக்கு எங்க போனீங்க எனக் கேட்க அதற்கு அவர் நான் என் பிரண்ட பாக்க போனேன் என பொய் சொல்கிறார். அப்போது அந்த ரெஸ்டாரன்ட் புகைப்படங்களை காட்டி இதில் இருக்கும் ஒருத்தரை மட்டும் எனக்கு தெரியல என சொல்லி காட்டுகிறார். அது வேறு யாருமில்லை கோபி தான் அதை பார்த்து கோபி ஷாக் ஆகிவிட்டு பொய் சொல்கிறார். இனியா நான் இல்லங்கறதுக்காக மார்ப்பிங் பண்ணி இருப்பா என கூறுகிறார்.

ஆனால் ராதிகா எதையும் நம்பாமல் என்ன பாக்கியா கூப்பிட்டாங்க ஆனா நான் போகல எதுக்காக உங்கள் அசிங்கப்படுத்திடாங்க அதுக்காக தான். உங்கள அவங்க கூப்பிட்டாங்களா  இல்ல இல்ல அப்புறம் ஏன் நீங்க போனீங்க என சொல்லி தலையிலேயே அடிக் கிறார். இப்படி அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து இனியா ரும்க்கு போகிறார்.  சண்டை போடும் சத்தம் கேட்டதும் கீழே வந்து விடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.