கோபிக்கு ஆதரவாக இருக்கும் செழியன், இனியா!! கோபிக்காக மொத்த நகைகளையும் கொடுக்கும் பாக்யா.!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவை திட்டி விட்டு சென்று விடுகின்றனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தூங்குகின்றனர். அப்போது ராதிகா கோபியிடம் இந்த பாக்கியா முன்னாடி அசிங்கப்படக்கூடாதுன் னு நினைச்சேன் நீங்களும் அசிங்கப்பட்டு என்னையும் அசிங்கப்படுத்திட்டிங்களே என தீட்டுகிறாள்.

அடுத்த சீனில் கோபியின் அம்மா ஈஸ்வரி தூங்காமல் அழுது கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி தாத்தா தூங்க சொல்லுகிறார். அடுத்த நாள் காலையில் பாக்யா  டீ கொண்டு வந்து கொடுக்கிறார் அப்போது என்ன சரியா நைட்டு தூங்கலையா என மாமனார் மாமியாரிடம் கேட்கிறார்.

அண்ணாமலை சட்டை பாக்கெட்டில் இருந்து காசை திருடிய மனோஜ்.! நீ எல்லாம் திருந்தவே மாட்டியா..

உடனே அதனை தொடர்ந்து தனது நகைகளை எடுத்து வந்து மாமியாரிடம் கொடுத்து இத நீங்க உங்க மகனுக்கு கொடுக்க  பயன்படுத்திக்கோங்க என சொல்கிறாள். அவர்கள் வேண்டாம் என மறுக்க  பேசிப் பிடிவாதமாக கொடுத்து விட்டு சென்று விடுகிறாள். உடனே அதை வாங்கிக் கொண்ட  தாத்தா பாரு பாக்யா தனக்கு கெடுதல் நினைக்கிறவங்க கூட நல்லா இருக்கணும்னு நினைக்கிறா என சொல்கிறார்.

அடுத்த சீனில் ராதிகா ஆபீசுக்கு கிளம்புகிறாள். அப்போது கோபி கட்டிலில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது இனியா அங்கு வருகிறாள்.கோபி உடனே இனியா நீ என்கிட்ட என்ன வேணும்னாலும் கேளு என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு அது மட்டும் இல்லாம நான் இப்படியே இருக்க மாட்டேன் நான் வேற பிசினஸ் பண்ண போறேன் இல்லன்னா வேற ஆபீஸ்க்கு வேலைக்கு போக போறேன் அதனால உனக்கு என்ன வேணும்னாலும் நீ என்கிட்ட தயங்காம கேளு என பேசிக் கொண்டிருக்கிறார்.

அம்மா என்று கூட பார்க்காமல் கோதைக்கு தரமான பதிலடி கொடுத்த தமிழ்.! இதுக்கு பேரு தான் உள்குத்தா.. இப்ப புரிஞ்சிருக்குமே..

அதற்கு இனியா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லப்பா, நம்ம வீட்ல நிறைய பிரச்சனை இல்ல அதனால தான் நான் உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் நீங்க எப்பவுமே ஒரு நல்ல அப்பா தான் அப்பா என சொல்லி கட்டி பிடிக்கிறாள். அவரைத் தொடர்ந்து அடுத்தது செழியன் ரூமுக்கு வருகிறார் என்னப்பா இன்னைக்கு ஜாக்கிங் வரவே இல்ல வாங்க போலாம் என கூப்பிடுகிறார் அதற்கு இன்னைக்கு ஒரு நாளைக்கு வேண்டாம் என கோபி சொல்ல அதற்கு செழியனோ என்ன பிரச்சனை வந்தாலும் அத பாத்துக்கணும்பா அதுக்காக சோர்ந்து போகக்கூடாதுன்னு நீங்க சொல்லி கொடுத்து இருக்கீங்க. அதனால  வாங்க போகலாம் என சொல்லி அழைத்துவிட்டு போகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.