மினிஸ்டரை பார்த்ததும் தெறித்து ஓடும் கோபி.! ஜெனியை அழைத்து சென்ற செழியன்

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் மினிஸ்டர் வந்து ரெஸ்டாரன்ட் திறந்து வைக்கிறார். அதன் பிறகு  பாக்யா மினிஸ்டரை சாப்பிட சொல்கிறார். மினிஸ்டர் நேரம் இல்ல சிஎம் மீட்டிங் இருக்கு நான் இன்னொரு நாள் வந்து விருந்தே சாப்பிடுறேன் என கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து பாக்யா நான் ஒரு ரெண்டு நிமிஷம் பேசிக்கலாமா என மினிஸ்டரிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு மினிஸ்டர் சரி பேசுங்க என கூறுகிறார். உடனே பாக்யா தனது வளர்ச்சிக்கு பக்க பலமா இருந்து உதவிய குடும்பத்தார்களுக்கு நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து  மினிஸ்டருக்கும் நன்றி கூறினார். அப்படி கூறுகையில் மினிஸ்டர் தனது கட்சிக் கூட்டத்திற்கு என்னை சமைக்க சொல்லி ஆர்டர் கொடுத்தது தான் என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறி நன்றி கூறினார். அது தொடர்ந்து மினிஸ்டர் பேசுகையில் பாக்யா பல பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார். அத்தோடு மட்டும் இல்லாமல் அவர் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு என பாக்யாவை பாராட்டினார்கள் . அதோடு தாத்தா ஒரு மாசம் இதே மாதிரியே சமைமா அப்புறம் ஹோட்டல் ஆஹா ஓஹோன்னு ஓடிடும் என கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து சாப்பிடும் போது செழியன் ஜெனியையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா இதோட செழியன் அண்ணன் 72வது தடவை ஜெனி அக்காவ பாக்கறாங்க ஆனா ஜெனி அக்காவோ பார்க்கவே மாட்டேங்குறாங்க ஒரு தடவையாது பாருங்க அக்கா என சொல்கிறார். அதற்கு ஜெனி இனியா சாப்பிடுற வேலைய பாரு என கூறுகிறார்.

சாப்பிட்டு முடித்ததும் இனியா போன் எடுத்து facebook பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது மினிஸ்டர் ரெஸ்டாரன்ட் திறப்பு விழா புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுருக்காங்க என அனைவரிடமும் காண்பித்து சந்தோஷப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த சீனில் ஜெனி நான் வீட்டுக்கு கிளம்புறேன் போயிட்டு வரேன் பாப்பாவ கொடுங்க என கேட்கிறார். அப்போது பாட்டி என் பேத்திய கூட என்னால நிம்மதியா கொஞ்ச முடியல என வருத்தப்படுகிறார். உடனே செல்வியும் ஏன் ஜெனி போய் ஆகணுமா நீ எங்க கூட வீட்டுக்கு வா என கூப்பிடுகிறார். ஜெனி போறேன்னு சொன்னதும் செழியன் வருத்தப்படுகிறார். அதோடு எழில் ஜெனிக்காக டாக்ஸி புக் பண்ணுகிறார்.

டாக்ஸி கிடைக்கவில்லை.  நான் கொண்டாந்து விடுகிறேன் வாங்க என கூப்பிடுகிறார். அதற்கு தாத்தா ஏன்டா எல்லாத்துக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி நிக்குற  செழியன் கொண்டு போய் விடட்டும் எனக் கூறுகிறார்.

ஜெனி வேண்டாம் என மறுக்கிறார். பாட்டியும் செழியன் போக வேண்டாம் ஜெனி ஓட அப்பா திட்டுவாரு என கூறுகிறார். ஆனால் தாத்தா ஒரே பிடிவாதமாக செழியா நீ போய் விட்டுட்டு வா என சொல்லி அனுப்பி விடுகிறார். இதனால் செழியன் ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஜெனி காரில் ஏறுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.