தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட பயில்வான் ரங்கநாதன்.! அப்படி என்ன செய்தார் தெரியுமா.?

சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களாக இருந்தாலும் சரி நடிகைகளாக இருந்தாலும் சரி பாரபட்சம் பாக்காமல் அவர்களின் அந்தரங்க தகவல்களை பற்றி சோசியல் மீடியாக்களில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி நடிகராவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் விமர்ச்சகராக இருந்தாலும் ஒரு காலத்தில் சினிமாவாதியாக இருந்து தான் விமர்ச்சகராக மாறி இருந்தாலும் தன் தொழிலை கேவலப்படுத்த கூடாது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க தகவல்களை பேசி வருகிறார்.

அந்த வகையில் பலரது அந்தரங்க தகவல்களை பேசி திட்டு வாங்கிக் கொண்டு வந்த பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி தானே ஒரு வீடியோவில் பல தகவல்களை கூறியிருக்கிறார். இவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அதாவது பைல்வான் கூறியதாவது தன்னை மூன்று நடிகைகள் காதலித்ததாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய கேட்டதாகவும் கூறி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். ஆனால் பயில்வான் ரங்கநாதன் அவர்களை ஏற்க மறுத்து விட்டாராம். அதுமட்டுமல்லாமல் கவுண்டமணியுடன் பல படங்களில் நடித்த பிரபல காமெடி நடிகை ஒரு என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய ஆசை படுவதாகவும் கூறியுள்ளாராம்.

ஆனால் இவர்களுடைய காதலை ரங்கநாதன் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டாராம். ஏனென்றால் தன்னுடைய குடும்பம் ஆச்சரியமானவர்கள் அதுமட்டும் இல்லாமல் இந்த திருமணத்தை ஏற்க்க மாட்டார்கள். அவர்கள் மீது எனக்கு துல்லியும் விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இப்போது அந்த மூன்று நடிகைகளில் ஒருவர் மிக மோசமான நிலையில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார் அந்த நடிகை ஷர்மிலியாக இருக்கலாம் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். அதுமட்டும் இல்லாமல் இப்படி இருக்கும் நிலையில் அடுத்தவர்களின் அந்தரங்க தகவல்களை பற்றி பேச கூடாது என்று நெட்டிசங்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment