பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையை ஒரே நாளில் அசால்டாக முறியடித்த திரைபடம் அதுவும் எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த வருடத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளையே புரட்டிப் போட்ட சம்பவம் கொரோனா வைரஸ், அதற்குப் பிறகு இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட சம்பவம் என்றால், இளம் நடிகர் சுஷாந்தின்  மரணம்தன். இவரின் இழப்பு இந்திய சினிமாவைப் புரட்டிப் போட்டது மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் சுஷாந்த் நிலைமையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பல சுஷாந்த்கள் இருக்கிறார்கள் என பல்வேறு பல கருத்துக்களைத் தெரிவித்தார்கள், இவரின் மரணம் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது, இந்த நிலையில் சுஷந்தின்  கடைசி நடிப்பில் வெளியாகி திரைப்படம்தான் dil bechara.

இந்த திரைப்படம் ரசிகர்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மேலும் இந்த திரைப்படத்தை முக்கேஷ் சேப்ரா என்பவரின் இயக்கத்தில் உருவாகி உள்ளது அது மட்டுமல்லாமல் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியானது, வெளிவந்த 24 மணி நேரத்தில் இந்த திரைப்படம் 95 மில்லியன் பார்வைகளை கடந்தது.

அதுமட்டுமில்லாமல் இதனை கணக்கிட்டு வசூலில் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரே நாளில் 2000 கோடி ரூபாய் வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது, இதனை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு புகழ் பெற்றாலும் இப்பொழுது சுஷாந்த் உயிரோடு இல்லாதது பலருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் பல பிரபலங்கள் சுஷாந்த் மரணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

Leave a Comment