எஸ்எஸ் ராஜமௌலியின் புதிய திட்டத்தால் உருவாகும் பாகுபலி 3.! பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.? உச்சக்கட்ட சந்தோசத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை எப்படி இயக்குனர் சங்கர் வைத்துள்ளார் அதுபோல தெலுங்குவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது எஸ்எஸ் ராஜமௌலி தான்.

அதற்கு உதாரணம் அவரது திரைப்படங்கள் தான். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களை மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்திருந்தார் அந்த படத்தின் பட்ஜெட்டை விட பல கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தியது. இரண்டு படங்களும் சேர்த்து சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பல பிரபலங்களை உள்ளடக்கி RRR என்ற திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடிய உடனேயே அடுத்ததாக மீண்டும் பாகுபலி3 படத்தை எடுக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன.

இந்த திரைப்படத்தை 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன இந்த திரைப்படத்தை ராஜமௌலி திரையரங்கிற்கு கொடுப்பதற்கு மாறாக  OTT தளத்திற்கு கொடுக்க உள்ளார்.

நெட்பிளிக்ஸ் ஓட்டிப் தளத்திற்கு பாகுபலி 3 திரைப்படத்தை கொடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தை ஒன்பது எபிசோடுகளாக எடுக்க உள்ளனர்.

பாகுபலி  இரண்டு பாகங்கள் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து உள்ளதால் மூன்றாவது படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவலில் எகிறி உள்ளது.

இந்த படமும் நிச்சயம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது.

Leave a Comment